Screen Reader Access     A-AA+
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், மலைக்கோயில், திருத்தணி - 631209, திருவள்ளூர் .
Arulmigu Subramanyaswamy Temple, Malaikoil, Tiruttani - 631209, Tiruvallur District [TM001506]
×
Temple History

இலக்கிய பின்புலம்

பக்தி இலக்கியங்களில் ஒன்றான திருப்புகழைத் தந்த அருணகிரிநாதர் தனது பாடலில், சினத்தவர் முடிக்கும் பகைத்தவர் குடிக்குஞ் செகுத்தவர் ருயிர்க்குஞ் ...... சினமாகச் சிரிப்பவர் தமக்கும் பழிப்பவர் தமக்கும் திருப்புகழ் நெருப்பென் ...... றறிவோம்யாம் நினைத்தது மளிக்கும் மனத்தையு முருக்கும் நிசிக்கரு வறுக்கும் ...... பிறவாமல் நெருப்பையு மெரிக்கும் பொருப்பையு மிடிக்கும் நிறைப்புக ழுரைக்குஞ் ...... செயல்தாராய் தனத்தன தனத்தந் திமித்திமி திமித்திந் தகுத்தகு தகுத்தந் ...... தனபேரி தடுட்டுடு டுடுட்டுண் டெனத்துடி முழக்குந் தளத்துட னடக்குங் ...... கொடுசூரர் சினத்தையு முடற்சங் கரித்தம லைமுற்றுஞ் சிரித்தெரி கொளுத்துங் ...... கதிர்வேலா தினைக்கிரி குறப்பெண் தனத்தினில் சுகித்தெண் திருத்தணி யிருக்கும் ...... பெருமாளே. என முருகன் சினந்தனிந்து இத்திருத்தலத்தில் வள்ளியை மணந்து ஐந்தாம் படைவீடாக இக்குன்றின் மீது அமர்ந்து அருள்பாலிப்பதையும், கந்த புராணம் கண்ட கச்சியப்பர் மலர்களில் தாமரை மலர் போலவும், நதிகளில் கங்கை நதி...