Screen Reader Access     A-AA+
அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், அழகர்கோயில் - 625301, மதுரை .
Arulmigu Kallalagar Temple, Alagarkovil - 625301, Madurai District [TM032123]
×
Temple History

தல பெருமை

தமிழ்நாட்டில் ஆழ்வார்களால் பாடப்பெற்ற வைணவத் திருப்பதிகளில் ஒன்று அழகர்கோயில் ஆகும், நிலக்குறுங்கோட்டில் 10.5 பாகையிலும், நிலநெடுங்கோட்டில் 78.14 பாகையிலும் அமைந்துள்ள அழகர்கோயில், மதுரை மாவட்டத்தில் மேலூர் வட்டத்தைச் சேர்ந்ததாகும், மதுரையிலிருந்து வடக்கு- வடகிழக்குத் திசையில் பன்னிரண்டு கல் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. இப்போது கோயிற் பணியாளர் குடியிருப்புக்களைத் தவிர மக்கள் வசிக்கும் ஊர்பகுதி எதுவும் இக்கோயிலை ஒட்டி இல்லை. அண்மையிலுள்ள வலையப்பட்டி, கோனாவரையான், ஆயத்தபட்டி...

இலக்கிய பின்புலம்

இலக்கியங்களில் அழகர்கோயில் :: தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் திருமாலிருஞ்சோலை என்னும் அழகர்கோயில் பழமைச்சார்ந்த ஒரு திருப்பதியாகும். இத்தலத்தினைப் பற்றிய செய்திகள் தமிழ் இலக்கியங்களில் விரிவாகக் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் பெயர் சுட்டப்பெறும் ஒரே ஒரு வைணவத்தலம் இதுவேயாகும். பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார் இத்தலத்தினை மாலிருங்குன்றம் என்று குறிப்பிடுகின்றார். சிலப்பதிகாரம் இக்கோயிலமைந்த மலையினைத் திருமால் குன்றம் என வழங்குவதோடு, இக்கோயிலினையும் குறிப்பிடுகின்றது. ஆழ்வார்களில் ஆறு பேர் இக்கோயிலைப் பற்றி பாடியுள்ளனர். முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வாரும், பெரியாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆண்டாள் ஆகியோரும் மொத்தம் நூற்றி இருபத்து எட்டு (128) பாசுரங்களில்...

புராண பின்புலம்

இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்றுகள் ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும், பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார் ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்குப் பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ, குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்குப் பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே, இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்து ஏதும் காணப்படவில்லை. தமிழ்நாட்டு வைணவத் திருப்பதிகளில் அழகர்கோயில் பழமை வாய்ந்த ஒன்றாகும். சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் பெயர் சுட்டிச் சொல்லப்பெறும் திருமால் திருப்பதி இதுவாகும். முதலாழ்வார்கள் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வாரும் இக்கோயிலைப்...