ஒவ்வொரு வீட்டினும் ஒவ்வொரு திருவிளையாடலைப் புரிந்து உவந்த முருகக்கடவுள். இப்படை வீட்டிலும் நிகழ்த்தி மகிழ்கின்றார். இங்கு எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் பழம் உதிர்த்த திருவிளையாடலாகும்.
பழங்காலத்தில் இத்தலம் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அந்த வழியாக ஒளவை மூதாட்டியார் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் முருகக்கடவுளிடத்தில் நீங்கா அன்பு கொண்டவர். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களாலும் ஒப்ப மதித்துப் போற்றப்பட்ட முத்தமிழ் வித்தகர். தமிழ் நலம் காரணமாகவும். அன்பின் நிறம் காரணமாகவும் முருகப்பெருமான். ஒளவை மீது இரக்கம் கொண்டார். அம்மூதாட்டிக்கு அருள் புரியத்திருவுள்ளங்கொண்டார். அருள் புரிவதன் வாயிலாக உலகுக்குப் பல நீதிகளை உணர்த்தும் குறிப்புக் கொண்டார்.
தமிழ் மூதாட்டியாகிய ஒளவை. கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்தார். ஒளவையின்...ஒவ்வொரு வீட்டினும் ஒவ்வொரு திருவிளையாடலைப் புரிந்து உவந்த முருகக்கடவுள். இப்படை வீட்டிலும் நிகழ்த்தி மகிழ்கின்றார். இங்கு எம்பெருமான் நிகழ்த்திய திருவிளையாடல் பழம் உதிர்த்த திருவிளையாடலாகும்.
பழங்காலத்தில் இத்தலம் மதுரைக்குச் செல்லும் வழியில் அமைந்திருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. அந்த வழியாக ஒளவை மூதாட்டியார் மதுரையை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அவர் முருகக்கடவுளிடத்தில் நீங்கா அன்பு கொண்டவர். சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களாலும் ஒப்ப மதித்துப் போற்றப்பட்ட முத்தமிழ் வித்தகர். தமிழ் நலம் காரணமாகவும். அன்பின் நிறம் காரணமாகவும் முருகப்பெருமான். ஒளவை மீது இரக்கம் கொண்டார். அம்மூதாட்டிக்கு அருள் புரியத்திருவுள்ளங்கொண்டார். அருள் புரிவதன் வாயிலாக உலகுக்குப் பல நீதிகளை உணர்த்தும் குறிப்புக் கொண்டார்.
தமிழ் மூதாட்டியாகிய ஒளவை. கடும் வெயிலில் மிகவும் களைப்புடன் மதுரை நோக்கிச்சென்று கொண்டிருந்தார். ஒளவையின் நிலையறிந்த முருகப்பெருமான் மாட்டுக்காரச் சிறுவனாக உருக்கொண்டு. ஒளவை செல்லும் வழியினிடையில் இருந்த நாவல் மரம் ஒன்றின் மீது ஏறி கிளையில் அமர்ந்து கொண்டார். களைப்போடு அவ்வழியே வந்த ஒளவையார். மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு செல்லக்கருதி, அம்மரத்தின் கீழ்ச்சென்று ஓய்வெடுத்தார்.
அந்நிலையில் அம்மரக்கிளையில் இருந்த மாட்டுக்காரச்சிறுவன். ஒளவையை நோக்கி, பாட்டி களைப்பைப் போக்க நாவற்பழங்கள் வேண்டுமா? என்று பரிவுடன் கேட்டான். அதைகேட்ட ஒளவை மகிழ்வுற்று: வேண்டும் என மறுமொழி கூறினார்.
அதைக்கேட்ட முருகனாகிய மாட்டுக்காரச்சிறுவன். சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று இரு கேள்விகளைக் கேட்டார்.
அக்கேள்விகள் ஓளவையைத் திகைக்கச் செய்தன. பின்னர் ஒளவை சுடாத பழமாகவே தருக என்று கூறினார்.
மாட்டுக்காரச்சிறுவன் மரக்கிளையை உழுக்கினான். கிளையில் இருந்த கனிந்த பழங்கள் கீழே உதிர்ந்தன. கீழே விழுந்த பழங்களில் மண் ஒட்டிக் கொண்டது. ஒளவையார் ஒவ்வொரு பழமாக எடுத்து, அதில் ஒட்டிக்கொண்டிருந்த மண்ணைப் போக்குவதற்கு வாயினால் ஊதினார்.
அதைக்கண்ட மாட்டுக்காரச் சிறுவன் பாட்டி பழம் மிகவும் சுடுகின்றதா? நன்றாக ஊதி ஆறிய பிறகு உண்க என்று கூறிய வண்ணம் சிரித்தான், அச்சிறுவனின் மதி நுட்பத்தை வியந்த ஒளவையார். தன் அறிவின் சிறுமையை எண்ணிக் கண் கலங்கினார்.
முருகப்பெருமான் இத்திருவிளையாடல் மூலம் ஒரு தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியருளினார். அஃதாவது, உலகில் உள்ள உயிர்களெல்லாம் உலகப்பற்று என்னும் மண்ணால் ஒட்டப்பட்டிருக்கின்றன. அந்த மண்ணைப் போக்க வெறும் கல்வியறிவு மட்டும் போதாது.
இறைவனை உணரும் மெய்யறிவு தேவை மெய்யறிவு ஒன்றினாலேயே பற்று என்னும் மண்ணை அகற்ற முடியும். மெய்யறிவினால் பற்று என்னும் மண்ணை அகற்றுதல் வேண்டும் என்பதாகும்.
அடியார் இடர்களையும் அருள் வள்ளலாகிய முருகன், களைப்பால் வருந்திய ஒளவைக்கு இடர்களைந்து அருள்புரிய மாட்டுக்கார சிறுவனாகத் தோன்றி திருவிளையாடல் புரிந்தருளினார். இன்றும் அம்மரத்தின் தொடர்ச்சி மரமாக திருக்கோவிலின் வலப்புரத்தில் அந்த நாவல் மரம் தலவிருட்சமாகவும் மரத்தின் அடியில். நாவல்மரத்தடி விநாயகரும் காட்சி தருகின்றனர்.
இந்த மரம் ஏனைய மரங்கள் பழுக்கும் காலத்தில் பழம் பழுக்காமல் . (மற்ற மரங்கள் ஆடி, ஆவணி மாதத்தில் பழம் பழுக்கும்) ஆண்டுதோறும் முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி திருவிழா மாதமாகிய ஐப்பசித் திங்களில் தான் இந்த மரம் நாவல் பழம் பழுக்கும். இவ்வதிசயத்தை நாம் இன்றும் காணலாம்.
முருகப்பெருமான். ஒளவைக்கு உதிர்த்த பழம் வடிவில் நாவற்பழமேயாயினும், உண்மையில் அது ஞானப்பழமாகும். முருகனே ஒரு ஞானப்பழம், ஞானப்பழமான முருகன் இவ்வாறு நாவற்பழங்களை உதிர்த்தால் இத்தலம் பழமுதிர்ச்சோலை பழம் உதிர்க்கப்பட்ட சோலை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தப் பழமுதிர்ச்சோலைப் பகுதியில் கருணை வடிவாயுள்ள முருகனைக் கண்டு கரங்குவித்து வணங்கி வழிபட்டால் ஞானமும் கல்வியும் பெற்று நல்வாழ்வினைக் கொள்ளலாம்.
.
தல பெருமை
முருகப்பெருமான் தெய்வப்புலவர் அவ்வையாரின் புலமையை சோதனை செய்ய எண்ணி மாடுமேய்ப்பவர் வேடத்தில் வந்து நாவல்மரத்தில் மேல் அமர்ந்துகொண்டு பாட்டிஉனக்கு சுட்டப்பழம் பழம்வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்க அவ்வையாரோ பழத்தில் என்ன சுட்டப்பழம் சுடாத பழம் இருக்கிறது என எண்ணி சுடாத பழமேகொடு எனக் கேட்க முருக பெருமான் நாவல் மரக்கிளையிலிருந்து நாவல் பழங்களை உதிர்த்துவிட அதனை ஔவையார் எடுத்து நாவல் பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊதியவுடன் முருகப்பெருமான் பாட்டி என்ன பழம் சுடுகிறதா எனக் கேட்டார் உடனே கருங்காலி கட்டை போன் ற என்னை இந்த மாடு மேய்க்கும் சிறுவன் பரிசோதித்து விட்டானே என நினைத்து யாரப்பா நீ என வினவ தான் வந்திருப்பது முருகன் என்று ம் உம்மை...முருகப்பெருமான் தெய்வப்புலவர் அவ்வையாரின் புலமையை சோதனை செய்ய எண்ணி மாடுமேய்ப்பவர் வேடத்தில் வந்து நாவல்மரத்தில் மேல் அமர்ந்துகொண்டு பாட்டிஉனக்கு சுட்டப்பழம் பழம்வேண்டுமா சுடாத பழம் வேண்டுமா எனக் கேட்க அவ்வையாரோ பழத்தில் என்ன சுட்டப்பழம் சுடாத பழம் இருக்கிறது என எண்ணி சுடாத பழமேகொடு எனக் கேட்க முருக பெருமான் நாவல் மரக்கிளையிலிருந்து நாவல் பழங்களை உதிர்த்துவிட அதனை ஔவையார் எடுத்து நாவல் பழத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஊதியவுடன் முருகப்பெருமான் பாட்டி என்ன பழம் சுடுகிறதா எனக் கேட்டார் உடனே கருங்காலி கட்டை போன் ற என்னை இந்த மாடு மேய்க்கும் சிறுவன் பரிசோதித்து விட்டானே என நினைத்து யாரப்பா நீ என வினவ தான் வந்திருப்பது முருகன் என்று ம் உம்மை பரிசோதிக்கவே வந்ததாக கூறுகிறார் .முருகனின் அறுபடை வீடுகளில் இத்தலம் ஆறாவது படை வீடாகும் .பழமுதிர்சோலையில் உள்ள முருக பெருமான் சிலப்பதிகாரம் , எட்டுத்தொகை பத்துப்பாட்டு ஆகிய பழைய தமிழ் மொழிகளின் தலைப்புகளில் பாராட்டப்படுகிறார் .நக்கீரர் , இளம்பெருவழுதியர் அருணகிரிநாதர் ஸ்ரீமத்குமரகுருபர சுவாமிகள் , ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும்.
இலக்கிய பின்புலம்
இளம் பெருவழுதியர், நக்கீரர் ,அருணகிரிநாதர், ஸ்ரீமத் குமரகுருபர ஸ்வாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.இளம் பெருவழுதியர், நக்கீரர் ,அருணகிரிநாதர், ஸ்ரீமத் குமரகுருபர ஸ்வாமிகள் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம் ஆகும்.