உண்டி கொடுத்தோர்... உயிர் கொடுத்தோரே... ஆண்டு முழுவதும் இக்கோயிலில் தினசரி பக்தர்களுக்கு உச்சிகால பூஜை முடிந்ததும் 50 நபர்களுக்கு அன்னதான திட்டத்தில் சாதம் சாம்பார், ரசம் மோர், பொரியல், ஊறுகாயுடன் உணவு அளிக்கப்படுகின்றது. இதற்காக அன்னதானம் அளிக்க விரும்பும் பக்தர்களிடம் ஒரு நாள் அன்னதானம் வழங்க ரூபாய் 1300 வசூலிக்கப்படுகிறது அல்லது நிரந்தர கட்டளையாக ரூபாய் 20000க்கான நிலையான வைப்பு தொகை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் மற்றும் அதன் வட்டி அன்னதான நன்கொடையாக எடுத்துக்கொள்ளப்படும்.கட்டளைதாரர் அவர் விரும்பும் நாளில் வருடத்தில் ஒரு முறை அன்னதானம் வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. அன்னதான நன்கொடைக்கு வருமான வரி 80ஜி விலக்கு உண்டு