Screen Reader Access     A-AA+
அருள்மிகு மூவுலகரசியம்மன் திருக்கோயில், காந்தல், ஊட்டி - 643001, நீலகிரி .
Arulmigu Moovulakarachi Amman Temple, Kandhal, Ooty - 643001, Nilgiris District [TM010032]
×
Temple History

தல பெருமை

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு காந்தல் பகுதியில் கசவர் இன மக்கள் வசித்து வந்துள்ளனர். இம்மக்கள் மலைப் பகுதிகளில் வசிப்பதால் காட்டு விலங்குகளிடமிருந்தும், விசப்பூச்சிகளிடமிருந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒரு சிறிய மேடையில் சுயம்புவை பிரதிஸ்டை செய்து அதை அம்மனாக பாவித்து வணங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வாப்சர் என்ற ஆங்கிலேயதுரை காந்தலில் வசிக்கும் தனது தந்தையை பார்க்க குதிரையில் வந்தார். குதிரை கோயில் அருகே வந்தவுடன் திடீரென்று நின்றுவிட்டது. அப்போது எதிரே வெள்ளை சேலை அணெிந்த பெண்மணி ஒருத்தி நடந்து வந்து கொண்டிருந்தாள், அந்தப்பெண்ணை பார்த்ததும் வாப்சர்துரை அவரை அறியாமல் குதிரையில் இருந்து இறங்கிவிட்டார். அவரது இரு...