முற்காலத்தில் சோழ வளநாட்டில் நல்லான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்த ஊழ்வினையினால், அவன் செய்துவந்த எல்லா வியாபாரமும் விளங்காமல் போக வறுமையில் வாடினான். அவன் தன் விதியை நொந்து கொண்டு, இறைவன் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுவிட்டு, ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி, மேற்கு நோக்கி வரத்தொடங்கினான். வரும்போது கட்டிக்சோற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் புண்ணியதலமான கொடுமுடியில் காவேரியில் புனித நீராடி, சோறு உண்டு பசியாறி புறப்பட்டான். ஆயினும், சோற்று மூட்டை பாரம் குறையாமல் இருக்க கண்டு,தன் மூட்டையினை பிரித்து பார்க்க அதனுள் வெங்கச்சங்கல் இருக்க கன்டான். கல் எப்படி இச்சோற்று மூட்டையில் வந்தது என்று...முற்காலத்தில் சோழ வளநாட்டில் நல்லான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்த ஊழ்வினையினால், அவன் செய்துவந்த எல்லா வியாபாரமும் விளங்காமல் போக வறுமையில் வாடினான். அவன் தன் விதியை நொந்து கொண்டு, இறைவன் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுவிட்டு, ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி, மேற்கு நோக்கி வரத்தொடங்கினான். வரும்போது கட்டிக்சோற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் புண்ணியதலமான கொடுமுடியில் காவேரியில் புனித நீராடி, சோறு உண்டு பசியாறி புறப்பட்டான். ஆயினும், சோற்று மூட்டை பாரம் குறையாமல் இருக்க கண்டு,தன் மூட்டையினை பிரித்து பார்க்க அதனுள் வெங்கச்சங்கல் இருக்க கன்டான். கல் எப்படி இச்சோற்று மூட்டையில் வந்தது என்று எண்ணி மனம் குழப்பம் உற்று விடைகானாது அக்கல்லை எடுத்த எரிந்து விட்டு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தான். சிறிது தூரம் சென்றவுடன் அச்சோற்று மூட்டை பழையபடி கணமாக தோன்ற மறுபடியும் பிரித்து பார்க்க, மறுபடியும் அக்கல் மூட்டையில் இருக்க கண்டான். திரும்பவும் அவன் அந்த கல்லை தூரம் எரிந்து விட்டு தனது பயணத்தை தொடர்ந்தான். இவ்வாறு பலமுறை அவ்வணிகன் அக்கல்லைவெளியே எரிந்தப்படி தனது பயணத்தை தொடர்ந்து ஓலப்பாலையம் என்ற கிராமத்திற்கு அருகில் வந்தான். அப்பொழுது அவன் ஏன் இப்படி நிகழ்கிறது என தெரியவில்லையே. நான் செய்த தவறுதான் என்ன என்று மனமுருகி காதலாகி கண்ணீர் மல்கி, எல்லாம் வல்ல வண்ணம் இறைவனை வேண்டி அக்கல் தனது மூட்டைக்குள் வர கூடாது என்று துதித்து அக்கல்லை எடுத்து வெளியே வீசினான். பிறகு அந்த கல் அவன் முன்னால் உருண்டபடி ஓடத் தலைப்பட, அவனும் அதிசயத்து, அதன் பின்னே ஓடத் தொடங்கினான். அக்கல் கண்ணபுரம் என்ற கிராமத்தில் கள்சிச்செடிகள் அடர்ந்த ஒரு காட்டை சென்றடைந்தது. பிறகு அது அசைவற்று நின்றபொழுது அந்த அதியசத்தை கண்ட அவ்வணிகன் அந்த கல்லையே இறைவடிவாக எண்ணி தன் துயர் போக்கும்படி வேண்டினான். அப்பொழுது அசரீரியாக நீ ஒரு குறிப்பிட்ட நபரிடம் சென்று பொன்னைக் கடனாகப் பெற்று வணிகம் செய்து மேன்மை அடைவாயாக என்று ஒலித்தது. அவ்வாறே அவ்வணிகன் தன் ஊர் சென்று அன்னாரிடம் கடனாகப் பெற்ற பொன்னைக் கொண்டு மாட்டு வணிகம் செய்து பெரும் பணம் படைத்தவனாகிச் சிறப்பாக வாழ்ந்தான்.
சிறிது காலம் சென்ற பின் அந்த கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு திரும்பிய மாடுகள் பல பால் சுரக்காததைக் கண்டு அவ்வூர் மக்கள் துயருற்றனர். ஏன் இப்படி நேருகிறது என்று அவர்கள் பசுமாடுகள் பின்னால் சென்று பார்க்க அம்மாடுகள் கள்ளிச்செடிகள் அடர்ந்த புற்றுக்குள் பால் சுரக்க கண்டனர். அதனை நீக்கி பார்க்க, அங்கு அந்த வெங்கச்சங்கல் இருக்கக் கண்டனர். அதனை எடுக்க முயன்றும், முடியாமல் சுயம்புவாக காட்சியளித்தது. பிறகு அவ்வூர் தலைவரின் கனவில் தோன்றி, நான் இங்கு இறைவியாக இருந்து, மக்கள் துயர் போக்க வந்துள்ளேன். எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி, வழிபடுங்கள் என்று கூற, அவரும் அவ்வூர் மக்கள் மூலம் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அருள்மிகு முத்துமாரியம்மானாக வழிபட்டு வருகிறார்கள்.
இவ்வாலயத்தில் நடைபெறும் ஆண்டு உற்சவத்தின்போது மாட்டுத் தாவணியும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு மாட்டு வியாபாரிகள் திரளாக வந்து, எல்லாம் வல்ல இறைவியாகிய அருள்மிகு முத்துமாரியம்மனைத் துதித்து தங்களுடைய வியாபாரத்தினைப் பெருக்கி, சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கருணைக் கடலாக விளங்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் தங்கள் கனவில் தோன்றியதாக பக்திப் பெருகக் கூறுவதை இன்றும் காணலாம்.
அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருள் நிறைந்த அன்னை முத்துமாரியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை இல்லையெனாது அருளி, அருள் சுரக்க கருணை வடிவாக காட்சி தருகிறாள். திரளான மக்கள் இங்கு வந்து எல்லாம் வல்ல இறைவியாக விளங்கும் அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.
மேற்கூறிய இத்தலவரலாறு செவிவழிச் செய்தியாகக் கூறப்பட்ட தல வரலாராகும்.
தல பெருமை
முற்காலத்தில் சோழ வளநாட்டில் நல்லான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்த ஊழ்வினையினால், அவன் செய்துவந்த எல்லா வியாபாரமும் விளங்காமல் போக வறுமையில் வாடினான். அவன் தன் விதியை நொந்து கொண்டு, இறைவன் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுவிட்டு, ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி, மேற்கு நோக்கி வரத்தொடங்கினான். வரும்போது கட்டிக்சோற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் புண்ணியதலமான கொடுமுடியில் காவேரியில் புனித நீராடி, சோறு உண்டு பசியாறி புறப்பட்டான். ஆயினும், சோற்று மூட்டை பாரம் குறையாமல் இருக்க கண்டு,தன் மூட்டையினை பிரித்து பார்க்க அதனுள் வெங்கச்சங்கல் இருக்க கன்டான். கல் எப்படி இச்சோற்று மூட்டையில் வந்தது என்று...முற்காலத்தில் சோழ வளநாட்டில் நல்லான் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் செய்த ஊழ்வினையினால், அவன் செய்துவந்த எல்லா வியாபாரமும் விளங்காமல் போக வறுமையில் வாடினான். அவன் தன் விதியை நொந்து கொண்டு, இறைவன் மேல் தன்னுடைய பாரத்தை போட்டுவிட்டு, ஏதேனும் வியாபாரம் செய்து பிழைத்துக்கொள்ள வேண்டி, மேற்கு நோக்கி வரத்தொடங்கினான். வரும்போது கட்டிக்சோற்றை ஒரு சிறு மூட்டையாக கட்டிக்கொண்டு வந்தான். வரும் வழியில் புண்ணியதலமான கொடுமுடியில் காவேரியில் புனித நீராடி, சோறு உண்டு பசியாறி புறப்பட்டான். ஆயினும், சோற்று மூட்டை பாரம் குறையாமல் இருக்க கண்டு,தன் மூட்டையினை பிரித்து பார்க்க அதனுள் வெங்கச்சங்கல் இருக்க கன்டான். கல் எப்படி இச்சோற்று மூட்டையில் வந்தது என்று எண்ணி மனம் குழப்பம் உற்று விடைகானாது அக்கல்லை எடுத்த எரிந்து விட்டு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தான். சிறிது தூரம் சென்றவுடன் அச்சோற்று மூட்டை பழையபடி கணமாக தோன்ற மறுபடியும் பிரித்து பார்க்க, மறுபடியும் அக்கல் மூட்டையில் இருக்க கண்டான். திரும்பவும் அவன் அந்த கல்லை தூரம் எரிந்து விட்டு தனது பயணத்தை தொடர்ந்தான். இவ்வாறு பலமுறை அவ்வணிகன் அக்கல்லைவெளியே எரிந்தப்படி தனது பயணத்தை தொடர்ந்து ஓலப்பாலையம் என்ற கிராமத்திற்கு அருகில் வந்தான். அப்பொழுது அவன் ஏன் இப்படி நிகழ்கிறது என தெரியவில்லையே. நான் செய்த தவறுதான் என்ன என்று மனமுருகி காதலாகி கண்ணீர் மல்கி, எல்லாம் வல்ல வண்ணம் இறைவனை வேண்டி அக்கல் தனது மூட்டைக்குள் வர கூடாது என்று துதித்து அக்கல்லை எடுத்து வெளியே வீசினான். பிறகு அந்த கல் அவன் முன்னால் உருண்டபடி ஓடத் தலைப்பட, அவனும் அதிசயத்து, அதன் பின்னே ஓடத் தொடங்கினான். அக்கல் கண்ணபுரம் என்ற கிராமத்தில் கள்சிச்செடிகள் அடர்ந்த ஒரு காட்டை சென்றடைந்தது. பிறகு அது அசைவற்று நின்றபொழுது அந்த அதியசத்தை கண்ட அவ்வணிகன் அந்த கல்லையே இறைவடிவாக எண்ணி தன் துயர் போக்கும்படி வேண்டினான். அப்பொழுது அசரீரியாக நீ ஒரு குறிப்பிட்ட நபரிடம் சென்று பொன்னைக் கடனாகப் பெற்று வணிகம் செய்து மேன்மை அடைவாயாக என்று ஒலித்தது. அவ்வாறே அவ்வணிகன் தன் ஊர் சென்று அன்னாரிடம் கடனாகப் பெற்ற பொன்னைக் கொண்டு மாட்டு வணிகம் செய்து பெரும் பணம் படைத்தவனாகிச் சிறப்பாக வாழ்ந்தான்.
சிறிது காலம் சென்ற பின் அந்த கிராமத்தில் மேய்ச்சலுக்குச் சென்று விட்டு திரும்பிய மாடுகள் பல பால் சுரக்காததைக் கண்டு அவ்வூர் மக்கள் துயருற்றனர். ஏன் இப்படி நேருகிறது என்று அவர்கள் பசுமாடுகள் பின்னால் சென்று பார்க்க அம்மாடுகள் கள்ளிச்செடிகள் அடர்ந்த புற்றுக்குள் பால் சுரக்க கண்டனர். அதனை நீக்கி பார்க்க, அங்கு அந்த வெங்கச்சங்கல் இருக்கக் கண்டனர். அதனை எடுக்க முயன்றும், முடியாமல் சுயம்புவாக காட்சியளித்தது. பிறகு அவ்வூர் தலைவரின் கனவில் தோன்றி, நான் இங்கு இறைவியாக இருந்து, மக்கள் துயர் போக்க வந்துள்ளேன். எனக்கு ஒரு ஆலயம் எழுப்பி, வழிபடுங்கள் என்று கூற, அவரும் அவ்வூர் மக்கள் மூலம் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்து அருள்மிகு முத்துமாரியம்மானாக வழிபட்டு வருகிறார்கள்.
இவ்வாலயத்தில் நடைபெறும் ஆண்டு உற்சவத்தின்போது மாட்டுத் தாவணியும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இங்கு மாட்டு வியாபாரிகள் திரளாக வந்து, எல்லாம் வல்ல இறைவியாகிய அருள்மிகு முத்துமாரியம்மனைத் துதித்து தங்களுடைய வியாபாரத்தினைப் பெருக்கி, சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு வரும் பெரும்பாலான வணிகர்கள் தங்கள் கருணைக் கடலாக விளங்கும் அருள்மிகு முத்துமாரியம்மன் தங்கள் கனவில் தோன்றியதாக பக்திப் பெருகக் கூறுவதை இன்றும் காணலாம்.
அங்கிக்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் அருள் நிறைந்த அன்னை முத்துமாரியம்மன் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு, கேட்ட வரத்தை இல்லையெனாது அருளி, அருள் சுரக்க கருணை வடிவாக காட்சி தருகிறாள். திரளான மக்கள் இங்கு வந்து எல்லாம் வல்ல இறைவியாக விளங்கும் அன்னையை வழிபட்டு வருகிறார்கள்.
மேற்கூறிய இத்தலவரலாறு செவிவழிச் செய்தியாகக் கூறப்பட்ட தல வரலாராகும்.