அருள்மிகு பரமசிவன் திருக்கோயில், Siviarpalayam, Kangeyam - 638701, திருப்பூர் .
Arulmigu Paramasivan Temple, Siviarpalayam, Kangeyam - 638701, Tiruppur District [TM010217]
×
Temple History
தல வரலாறு
தலவரலாறு
இத்திருக்கோயில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சேர்வழி கிராமம், சிவியார்பாளையம் என்னும் திருஊரில் எழுந்தருளியுள்ளது. இத்திருக்கோயில் நொய்யல் ஆற்றின் தென் கரையில் உள்ளது. நொய்யல் ஆறு பழங்காலத்தில் முன்னோர்களால் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. மேற்படி காஞ்சி மாநதி கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி பேரூர், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் வழியாக கிழக்கு நோக்கி வந்து கடைசியில் கொடுமுடியில் காவிரி நதியோடு இணைந்து விடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியர் குழந்தை பாக்கியம்வேண்டி சிவியார்பாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கும் கருமத்தம்பட்டிக்கும் இடையில் அரசூர் என்ற ஊரில் உள்ள பரமசிவன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக பலமுறை சென்றுவந்து கொண்டிருந்தனர். அப்போது...தலவரலாறு
இத்திருக்கோயில் திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், பரஞ்சேர்வழி கிராமம், சிவியார்பாளையம் என்னும் திருஊரில் எழுந்தருளியுள்ளது. இத்திருக்கோயில் நொய்யல் ஆற்றின் தென் கரையில் உள்ளது. நொய்யல் ஆறு பழங்காலத்தில் முன்னோர்களால் காஞ்சி மாநதி என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. மேற்படி காஞ்சி மாநதி கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகி பேரூர், கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் வழியாக கிழக்கு நோக்கி வந்து கடைசியில் கொடுமுடியில் காவிரி நதியோடு இணைந்து விடுகிறது. குழந்தை பாக்கியம் இல்லாத ஒரு தம்பதியர் குழந்தை பாக்கியம்வேண்டி சிவியார்பாளையத்திலிருந்து கோயம்புத்தூருக்கும் கருமத்தம்பட்டிக்கும் இடையில் அரசூர் என்ற ஊரில் உள்ள பரமசிவன் கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக பலமுறை சென்றுவந்து கொண்டிருந்தனர். அப்போது ஒருநாள் இரவில் அந்த தம்பதியரின் கனவில் பரமசிவன் தோன்றி, என்னை தரிசிக்க ஏன் இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு வருகிறீர்கள், நான் உங்கள் இடத்திற்கே வந்து விடுகிறேன். அங்கே என்னை வைத்து கொண்டாடுங்கள் என்று கூறிவிட்டு மறைந்ததாகவும், மேற்படி தம்பதியர் செய்வது அறியாது திகைத்து கொண்டிருந்த அந்த தம்பதியர் வேலை நிமித்தமாக நொய்யல் ஆற்றை கடந்து சென்ற போது ஆற்றில் ஓடிக்கொண்டிருந்த தண்ணீருக்குள் இருந்து இறைவன் ஒளிவடிவமாக தோன்றியதாகவும் அந்த ஒளிவட்டத்தின் நடுவில் வேலாயுதமாக காட்சி அளித்ததாகவும் அப்போது தண்ணீருக்குள் இருந்து ஏதோ ஒரு பொருள் தேகத்தில் பட்டதாகவும் அப்பொருள் எடுத்து பார்க்கும்போது அது இரும்பினாலான ஒரு சிறிய வேல் அந்த வேலை எடுத்து வந்து கோயில் கட்டி அந்த தம்பதியர் பூஜை செய்ததாகவும் அவர்களுக்கு குழந்தை வரம் கிடைத்ததாகவும் வயதான பெரியவர்கள் இத்திருக்கோயில் பற்றி கூறியுள்ளனர். இந்த வேல் தான் இத்திருக்கோயிலின் சுயம்பு ஆதிவேல் (சுயம்பு ஆதி மூலவர்) ஆகும்.
இறைவன் வந்ததற்கான அறிகுறி தெரிய ஒரு சொம்பு ஜலம் (நீர்) கொண்டு போல் தீபம் ஏற்று என்றது அசரீரி, அதன்படி இங்கு உள்ள காஞ்சிமா நதியில் இருந்து கொண்டு வந்த ஆதிமூலவர் முன்பு, பச்சை தண்ணீரில் விளக்கேற்றிய போது விளக்கு சுடர்விட்டு எரிந்ததாம். ஆதிகாலத்தில் இவ்வாறு பச்சைத் தண்ணீரிலேயே விளக்கேற்றப்பட்டு வந்துள்ளனர். 21 பரமசிவன் கோயிலில் முதன்மை அரசூர் இத்திருத்தலம் 9-ம்மிடம் இந்த பரமசிவன் கோயில் மிக்க சிறப்பு வாய்ததாகும்.
பழங்காலத்தில் இத்திருக்கோயிலை வேளாளக் கவுண்டர் இனத்தை சார்ந்தவர்கள் பூஜை செய்து வந்துள்ளனர். அவர்களால் வாரத்தில் இரண்டு நாட்கள் அதாவது திங்கள் கிழமை, வெள்ளிக் கிழமை இரவு 10 மணிக்கு மேல் 12 மணிக்குள் பூஜைகள் நடைபெற்று வந்துள்ளது. அதற்கு பின்னர் 5 தலைமுறையாக சிவஸ்ரீ முத்துசாமி சிவாச்சாரியார் மற்றும் சிவஸ்ரீ குப்புசாமி சிவாச்சாரியார் அவர்களுடைய சந்ததியினரால் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை, வெள்ளிகிழமை இரவு பூஜைகள் 10மணி அளவில் நடைபெற்று கொண்டிருக்கிறது.