அருள்மிகு செல்லீஸ்வரர் வகையறா திருக்கோயில், Anthiyur - 638501, ஈரோடு .
Arulmigu Selleeswarar Vagayara Temple, Anthiyur - 638501, Erode District [TM010240]
×
Temple History
தல பெருமை
அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயில் அந்தியூர் பேரூந்துநிலையம் அருகில் உள்ளது. இத்திருக்கோயில் மூலவர் சிவலிங்கம் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என செவிவழிசெய்திகள் உண்டு. பிற்காலத்தில் கோட்டை அமைத்து செல்லீஸ்வரர் திருக்கோயிலை கட்டினர் என்றும், கோயில் பின்புறம் வராக நதி என்ற பெயரில் அன்றைய காலத்தில் ஓடை இருந்தது. இத்திருக்கோயில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இத் திருக்கோயிலில் உள்ள வீரபைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். வீரபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது சிறப்பு வாய்தது ஆகும். மனிதனுக்கு எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர். இத்திருக்கோயிலில் சுவர்ண ஆகர்ஷன பைரவர் அருள்பாலிக்கின்றார். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த...அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோயில் அந்தியூர் பேரூந்துநிலையம் அருகில் உள்ளது. இத்திருக்கோயில் மூலவர் சிவலிங்கம் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என செவிவழிசெய்திகள் உண்டு. பிற்காலத்தில் கோட்டை அமைத்து செல்லீஸ்வரர் திருக்கோயிலை கட்டினர் என்றும், கோயில் பின்புறம் வராக நதி என்ற பெயரில் அன்றைய காலத்தில் ஓடை இருந்தது. இத்திருக்கோயில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும் சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும். இத் திருக்கோயிலில் உள்ள வீரபைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். வீரபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது சிறப்பு வாய்தது ஆகும். மனிதனுக்கு எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர். இத்திருக்கோயிலில் சுவர்ண ஆகர்ஷன பைரவர் அருள்பாலிக்கின்றார். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த பிரசித்தி பெற்ற பைரவ ஸ்தங்களில் ஒன்றாகும்.