முற்காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் பதிமூன்றாவது வருடவனவாசத்தின் போது விராடநாடு செல்வதற்கு முன் தற்போது தாராபுரம்கொளாநல்லியூர் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு குழலி அம்மனை பூசித்து வழி பட்டதாக செவி வழிச் செய்தியால் அறிய முடிகிறது. கொங்கு வேளாள குழாயன், கன்னகுல பெருமக்களுக்கும் மற்ற குடிமக்களுக்கும் குல தெய்வமாக இருந்து ஸ்ரீ குழலி அம்மன் அருள் பாலித்த செய்தி கொங்கு மண்டல ஸ்தலங்கள் மகிமை என்ற நூலில் இருந்து தெரிய வருகின்றது. ஸ்ரீ குழலி அம்மன் திருமலை என்ற மந்திரவாதியினால் அடிமையாக்கப்பட்டு தனது பெரிய சகோதரி தலையநல்லூர் பொன்காளி அம்மனால் தனது திருக்கல்யாண உற்சவத்திற்கு வராத காரணத்தால்...முற்காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் பதிமூன்றாவது வருடவனவாசத்தின் போது விராடநாடு செல்வதற்கு முன் தற்போது தாராபுரம்கொளாநல்லியூர் வந்து காவேரியில் குளித்து அருள்மிகு குழலி அம்மனை பூசித்து வழி பட்டதாக செவி வழிச் செய்தியால் அறிய முடிகிறது. கொங்கு வேளாள குழாயன், கன்னகுல பெருமக்களுக்கும் மற்ற குடிமக்களுக்கும் குல தெய்வமாக இருந்து ஸ்ரீ குழலி அம்மன் அருள் பாலித்த செய்தி கொங்கு மண்டல ஸ்தலங்கள் மகிமை என்ற நூலில் இருந்து தெரிய வருகின்றது. ஸ்ரீ குழலி அம்மன் திருமலை என்ற மந்திரவாதியினால் அடிமையாக்கப்பட்டு தனது பெரிய சகோதரி தலையநல்லூர் பொன்காளி அம்மனால் தனது திருக்கல்யாண உற்சவத்திற்கு வராத காரணத்தால் காவல் தெய்வம் சங்கிலி கருப்பண்ண சுவாமி துணையுடன் மந்திரவாதியை வென்று அடிமை நீக்கி அருள்மிகு பொன்காளியம்மனுடன் சேர்த்தி ஸ்ரீ குழலி அம்மன் காவல் தெய்வமாக ஸ்ரீ துலுக்கண்ண சுவாமியை அலகுமலையில் கண்டுபிடித்து அருள்மிகுபெரியாண்டவர் சின்னஆண்டவர் அருளாசியுடன் கொளா நல்லி அருள்மிகு குழலி அம்மனுக்கு அம்மன் காவல் தெய்வமாக்கி அருளாச்சி புரிந்து கொண்டுள்ள செய்தி கொளலி அம்மனின் உற்பத்தி ஸ்தாபமும் உற்பத்தி வரலாறு என்ற நூலின் மூலம் அறியப்படுகிது. அன்னை அருள்மிகு குழலி அம்மன் துர்க்கா தேவி அம்சமாக வடக்கு நோக்கி சதுர் புஜங்களுடன் அருள் புரிந்து கொண்டு உள்ளார்ள். மைசூர் மாமன்னன் திப்பு சூல்த்தான் கர்த்தர் அரசர்கள் ஆங்கிலேய அரசு ஆகியவைகளால் மான்யங்கள் வழங்கப்பட்டதாகவும் அறிய முடிகிறது.