தல வரலாறு
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அந்தியூரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மேற்குபார்த்த சன்னதியாக அமைந்துள்ளது. அந்தியூர் பகுதியில் முருகன் கோயில்கள் இல்லாமல் இருந்து வந்ததால் முருகன் வழிபாடு செய்ய ஊர்பொதுமக்களால் ஆலயம் நிர்மானம் செய்யப்பட்டது. அந்தியூர் மிகவும் பிரசித்திபெற்ற முருகன் திருக்கோயிலாகும்.