தல வரலாறு

கிட்டதட்ட 200 ஆண்டுகளுக்கு முன்னர் செங்காளி கோனார் என்பவர் கண் பார்வை குறை நீக்கி குணம் அளித்திட வேண்டி சூலக்கல் மாரியம்மன் கோயிலில் வணங்கி நின்று அங்கிருந்து வரும்போது ஆற்றுப்படுகையிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலையை வைத்து ஊர் மையத்தில் மேடை அமைத்து வழிபடத்துவங்கியதாக வரலாறு உள்ளது, அறுவடை முடிந்த காலம் என்பதாலும் பட்டியிட்டு ஆடு மாடுகள் ஊர் திரும்பும் காலம் என்பதாலும் ஆனி மாதத்தில் அம்மனுக்கு பண்டிகை மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது,