தல வரலாறு
ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், வாய்ப்பாடி கஸ்பா ஊராட்சிமன்றத்தில் வாய்ப்பாடி வார சந்தை அருகில் அருள்மிகு லட்சுமி நாரயணப்பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் பெருமாள் சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கிறார். இத்திருக்கோயிலுக்கு புரட்டாசி மாதம் நான்கு சனிக்கிழமைகளிலும் திருவிழா நடைபெறும்.