தல வரலாறு

தில்லை விநாயகர் திருக்கோயில் சென்னை ஏழு கிணறு சாம்பையர் தெருவில் அமைந்துள்ளது. பூக்கடையிலிருந்து கோவிந்தப்ப நாயக்கன் தெரு வழியாக வந்தால் இக்கோயிலை அடையலாம்.இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்டது. பிரதான சன்னதி தில்லை விநாயகர். இக்கோயில் தெற்கு முகமாக அமைந்துள்ளது. ஆவணி மாதம் வினாயகர் சதுர்த்தி உத்சவம் சிறப்பான அலங்காரத்துடன் வீதி உலா வு டன் நடைபெறுகிறது. இக்கோயிலில் வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் சன்னதி கேதாரீஸ்வரர் சன்னதி உள்ளது . நவகிரகங்களும் அமைந்துள்ளது சிறப்பு.. பக்தர்கள் வேண்டியது நிறைவேறும் என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் ஸ்தலமாக உள்ளது.