Screen Reader Access     A-AA+
அருள்மிகு நீலகண்டபிள்ளையார் திருக்கோயில், ஏந்தல், Endhal - 614804, தஞ்சாவூர் .
Arulmigu Neelakanda Pillaiyar Temple, Endhal - 614804, Thanjavur District [TM014062]
×
Temple History

தல பெருமை

ஸ்ரீ நீலகண்டப்பிள்ளையார் தீராத நோய்களை தீர்த்து வைக்கும் பிள்ளையாராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். தஞ்சை ஆண்டு வந்த துளசேந்திர மகாராஜாவின் (மராட்டியமன்னன்) அமைச்சருக்கு தீராத நீரிழிவு நோய் ஏற்பட்டு அதற்கு சிகிச்சை பெற திருப்பெருந்துறை( ஆவுடையார்கோயில்) செல்ல பேராவூரணி வழியாக தனது அரசு பரிவாரங்களுடன் வந்தார். இவ்விடம் வந்தபோது இரவு நேரமாகி விட்டப்படியால் சாலை ஓரத்திலிருந்த அரசமரத்தடியில் தனது பரிவாரங்களுடன் தங்கினார். அப்போது பேராவூரணி -ஏந்தல் என்னும் இப்பகுதியின் திருக்குளக்கரையில் சிறிய கூரைக் கொட்டகையில்பிட வீற்றிருந்த ஸ்ரீ பிள்ளையாருக்கு சங்கரன் இருவர் பூஜை செய்வதையும், சுவாமியை தரிசனம் செய்வதற்கு கூடியிருந்த பக்தர்களையும் கண்டார். அப்போது அதனை விசாரித்த துளசேந்திர மகாராஜாவின் அமைச்சர் தனக்கு இருந்துவந்த தீராத...