அருள்மிகு ஏகௌரியம்மன் மற்றும் மாரியம்மன் திருக்கோயில், - 613403, தஞ்சாவூர் .
Arulmigu Egowriamman And Mariamman Temple, Vallam - 613403, Thanjavur District [TM014094]
×
Temple History
தல வரலாறு
தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய பேரூர்களில் குறிப்பிடத்தக்க பெருமைகள் வாய்ந்த, பேரூர் தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடைச்சங்கம் நிகழ்ந்த காலத்தில் சோழநாட்டு கோ நகரங்களான பூம்புகார், உறையூர், அரூர், ஆவூர், ஆற்காடு, குடவாயில் என்னும் நகரங்களின் வரிசையில் வல்லமும் ஒன்று என்ற சங்கப் பாடல்கள் வாயிலாகவும் பிற்கால சோழர்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் வாயிலாகவும் அறிய முடிகிறது. 1989-93 ஆம் ஆண்டுகளில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் வல்லுநர்கள் ஆற்றிய அகழாய்வு பணிகளால் கிமு 170, கிபி 610, கிபி 830 ஆகிய ஆண்டுகளுக்கு வரலாற்றுத் தடையமுண்டு. மேலும் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர், அவற்றில் தொல்பழங்காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகளும் அடங்கும்.
தொல்காப்பிய உரையில்...தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புடைய பேரூர்களில் குறிப்பிடத்தக்க பெருமைகள் வாய்ந்த, பேரூர் தஞ்சாவூர் அருகில் உள்ள வல்லம் ஆகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடைச்சங்கம் நிகழ்ந்த காலத்தில் சோழநாட்டு கோ நகரங்களான பூம்புகார், உறையூர், அரூர், ஆவூர், ஆற்காடு, குடவாயில் என்னும் நகரங்களின் வரிசையில் வல்லமும் ஒன்று என்ற சங்கப் பாடல்கள் வாயிலாகவும் பிற்கால சோழர்களின் கல்வெட்டுகள், செப்பேடுகள் வாயிலாகவும் அறிய முடிகிறது. 1989-93 ஆம் ஆண்டுகளில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் வல்லுநர்கள் ஆற்றிய அகழாய்வு பணிகளால் கிமு 170, கிபி 610, கிபி 830 ஆகிய ஆண்டுகளுக்கு வரலாற்றுத் தடையமுண்டு. மேலும் பலவற்றை வெளிக்கொணர்ந்துள்ளனர், அவற்றில் தொல்பழங்காலத்து எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகளும் அடங்கும்.
தொல்காப்பிய உரையில் வல்லம்
சோழ நாட்டுப் பிவூரும், அழுத்தூரும், நாங்கூரும், கலன்சேரியும்
பெருஞ்சிக்கலும், வல்லமும், கிழாரும், முதலிய பதியிற் தோன்றி...
என்று குறிப்பிடுவதை நோக்கும்போது வல்லம் என்ற ஊரின் பெருமையும் முக்கியத்துவத்தையும் உணர முடிகிறது.
வல்லம் நகரின் வடபுறம் ஆலக்குடி செல்லும் சாலையை ஒட்டி இயற்கையின் எழில் மிகுந்த சூழல் நடுவே ஏகாந்தமாய் விளங்குவது கரிகால் சோழ மாகாளி கோயிலாகும். 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வல்லம் நகரின் காவல் தெய்வமாக விளங்கும் இத்தேவியின் கோயில் இரண்டு திருச்சுற்றுகள் பரிவார ஆலயங்கள் வடக்கு நோக்கிய திருக்கோபுரம் ஆகியவற்றோடு விளங்குகின்றது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மரபின் அடிப்படையிலேயே இன்றளவும் தேவியின் திருவுருவம் சுதையாலேயே அமைந்துள்ளது.
எட்டு திருக்கரங்களுடன் தேவி பத்ம பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி நல்குகின்றாள்.
பண்டு முதல் கரிகால் சோழ மாகாளி என அழைக்கப்பட்ட இத்தேவியை வல்லத்து பட்டாரகி என பராந்தக சோழனும், காலபிடாரி கைத்தலை பூசல் நங்கை என ராஜராஜ சோழனும் பிற்காலத்தில் (ஏக வீரி) என்றும் ஏகௌரி என்றும் பெயரிட்டு அழைத்தனர்.
2000 ஆண்டுகால வரலாற்று தடயங்களை சுமந்து நிற்கும் வல்லம் நகரமும் அங்கு திகழும் கோயில்களும் தமிழ் மக்களின் பண்பாட்டுச் சின்னங்கள் என்பதில் ஐயம் ஏதும் இல்லை. வரலாற்று தடயங்களை அழியாமல் காப்போம் திருக்கோயில்களை போற்றுவோம்.
ஏ-கௌரி
ஏகாந்தம்எல்லாம் நிறைந்த நிலை
விளக்கம்:
எல்லா சக்திகளையும் தன்னுள் அடக்கி சிவனின் உட்பொருளாகவும் விளங்குபவள்