அருள்மிகு சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், சுந்தரவளநாடு, Valamarkottai - 614019, தஞ்சாவூர் .
Arulmigu Sundaraswarar Temple, Valamarkottai - 614019, Thanjavur District [TM014098]
×
Temple History
தல வரலாறு
முன்னொரு காலத்தில் ஸ்ரீ விக்கிரம சிங்க பாண்டியன் என்னும் மன்னன் சீரும் சிறப்புமாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளை ஆண்டு வந்தான் அவன் சிறந்த சிவ பக்தன் ஆவான் அவனுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது அது என்னவென்றால் சிறந்ததொரு சிவன் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அதே நினைப்புடன் இந்த மன்னன் நாடு முழுவதும் வலம் வரும் பொழுது ஆலங்காட்டில் கல்லால மரத்தின் மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது உடனே மன்னன் விக்கிரம சிங்க பாண்டியன் தனது உடைவாளை எடுத்து கீழே வைத்து சிவ லிங்கத்தை தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். பிறகு தன்னுடைய உடைவாளை எடுக்க...முன்னொரு காலத்தில் ஸ்ரீ விக்கிரம சிங்க பாண்டியன் என்னும் மன்னன் சீரும் சிறப்புமாக இந்தப் பகுதியில் உள்ள நாடுகளை ஆண்டு வந்தான் அவன் சிறந்த சிவ பக்தன் ஆவான் அவனுக்கு ஒரு நீண்ட நாள் ஆசை இருந்தது அது என்னவென்றால் சிறந்ததொரு சிவன் ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்பதே ஆகும். அதே நினைப்புடன் இந்த மன்னன் நாடு முழுவதும் வலம் வரும் பொழுது ஆலங்காட்டில் கல்லால மரத்தின் மரத்தின் அடியில் சிவலிங்கம் ஒன்று காட்சியளித்தது உடனே மன்னன் விக்கிரம சிங்க பாண்டியன் தனது உடைவாளை எடுத்து கீழே வைத்து சிவ லிங்கத்தை தரிசித்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான். பிறகு தன்னுடைய உடைவாளை எடுக்க முயன்றபோது எடுக்க முடியவில்லை மன்னன் இது சிவனுடைய வேலை என்று அறிந்து சிவனை மனதார நெஞ்சு உருக வேண்டினான். உடனே சிவபெருமான் இடப உருவமாகி காட்சியளித்து இவ்விடத்திலேயே கோயில் எழுப்பு என ஆசீர்வதித்தார் மன்னன் இத்தல மூர்த்தியான சுந்தரேஸ்வரர் எனவும் அம்மை சௌந்தரநாயகி எனவும் பெயரிட்டு திருக்கோயில் எழுப்பி வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.