அருள்மிகு செங்கமலநாச்சியம்மன் திருக்கோயில், - 620102, தஞ்சாவூர் .
Arulmigu Sengamalanachiyamman Temple, Thanjavur - 620102, Thanjavur District [TM014099]
×
Temple History
தல பெருமை
தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது இந்த சிங்கள நாச்சியார் கோவில். அந்த கோவிலை பற்றிய மேலும் தகவல் அறிய எனது தேடலை தெடங்கினேன் அந்த தேடலின் விழைவாக முதலில் நான் அறிந்தது மிகவும் சுவாரஸ்யமான செவிவழி செய்தி அது என்னவென்றால். தஞ்சையில் ஆட்சி புரிந்த ஒரு சோழ மன்னன் ஒருவன் ஈழத்து அரசன் ஒருவனை பலமுறை அழைத்தும் அவன் வராமல் அவமரியாதை செய்ததாகவும். இறுதியில் அவன் தன குடும்பத்தோடும் சில காவல் வீரர்களோடும் வந்ததாகவும், பேரரசர் மிது உள்ள பயத்தில் மற்றவர்களை தஞ்சைக்கு வெளியே இந்த காட்டில் இருக்கவைத்து விட்டு தான் மட்டும் மன்னனை சந்திக்க...தஞ்சை குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரிக்கு மிக அருகில் உள்ளது இந்த சிங்கள நாச்சியார் கோவில். அந்த கோவிலை பற்றிய மேலும் தகவல் அறிய எனது தேடலை தெடங்கினேன் அந்த தேடலின் விழைவாக முதலில் நான் அறிந்தது மிகவும் சுவாரஸ்யமான செவிவழி செய்தி அது என்னவென்றால். தஞ்சையில் ஆட்சி புரிந்த ஒரு சோழ மன்னன் ஒருவன் ஈழத்து அரசன் ஒருவனை பலமுறை அழைத்தும் அவன் வராமல் அவமரியாதை செய்ததாகவும். இறுதியில் அவன் தன குடும்பத்தோடும் சில காவல் வீரர்களோடும் வந்ததாகவும், பேரரசர் மிது உள்ள பயத்தில் மற்றவர்களை தஞ்சைக்கு வெளியே இந்த காட்டில் இருக்கவைத்து விட்டு தான் மட்டும் மன்னனை சந்திக்க தஞ்சை நகருக்குள் சென்றதாகவும், சென்றவன் நீண்ட நேரம் ஆகியும் வராததால் காவலாளிகள் துணுக்குற்றனர் , ஈழ அரசனின் மனைவியை அழைத்து கொண்டு தங்கள் நாட்டிற்கு செல்ல முயற்சித்தனர் ஆனால் ஈழ அரசனின் மனைவி வர மறுத்துவிட்டதால் அவர்கள் அவளை தனியே விட்டு சென்றதாகவும், அந்த ஈழ அரசனின் மனைவி அங்கயே இருந்து உயிர்விட்டதாகவும் அந்த தியாகத்தை மதிக்கும் வகையில் சோழ மன்னர்கள் இங்கே ஒரு நினைவாலயம் அமைத்ததாக தஞ்சையில் ஒரு செவி வழி செய்தி உள்ளது. இந்த செய்திக்கு ஆதாரமாக கல்வெட்டும், சரஸ்வதி மகால் நூலகத்தில் ஒரு நாட்டுப்புற பாடலும் உள்ளது என்றும் கூறுகிறார்கள்.