அருள்மிகு துர்க்கையம்மன் திருக்கோயில், Palathali - 614602, தஞ்சாவூர் .
Arulmigu Durgaiamman Temple, Palathali - 614602, Thanjavur District [TM014135]
×
Temple History
தல வரலாறு
ஒரு காலத்தில் பால மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது இப்பகுதி. வனத்திற்கு அருகில் இருந்த ஊர் பொது மக்கள் பசுக்கயை பால மர வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். ஒரு கட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுக்களின் மடி பாலின்றி இருந்தன. இதில் குழம்பி போனவர்கள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி செல்பவர்களே பாலை கறந்து விடுகிறோர்களோ என சந்தேகப்பட்டு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென கருதி ஊர்மக்கள் ஒரு நாள் ரகசியமாக மேய்ச்சலுக்கு செல்பவர்களை பின்தொடர்ந்தனர். அப்போது பசுக்கள் மேடான ஒருஇடத்தில் நின்று கொண்டு தாமாகவே பாலை சொறிவதை கண்டு அதிர்ந்தனர். உடனே அனைவரும் ஒன்று கூடி அந்த மேட்டு பகுதியை தோண்ட அகிருந்து வெளிப்பட்டது அழகிய கல் விக்ரகம். அதனை...ஒரு காலத்தில் பால மரங்கள் அடர்ந்த வனமாக இருந்தது இப்பகுதி. வனத்திற்கு அருகில் இருந்த ஊர் பொது மக்கள் பசுக்கயை பால மர வனத்தில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். ஒரு கட்டத்தில் மேய்ச்சலுக்கு சென்று திரும்பும் பசுக்களின் மடி பாலின்றி இருந்தன. இதில் குழம்பி போனவர்கள் மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டி செல்பவர்களே பாலை கறந்து விடுகிறோர்களோ என சந்தேகப்பட்டு அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென கருதி ஊர்மக்கள் ஒரு நாள் ரகசியமாக மேய்ச்சலுக்கு செல்பவர்களை பின்தொடர்ந்தனர். அப்போது பசுக்கள் மேடான ஒருஇடத்தில் நின்று கொண்டு தாமாகவே பாலை சொறிவதை கண்டு அதிர்ந்தனர். உடனே அனைவரும் ஒன்று கூடி அந்த மேட்டு பகுதியை தோண்ட அகிருந்து வெளிப்பட்டது அழகிய கல் விக்ரகம். அதனை கண்டு வியப்பில் ஆழ்ந்த ஊர் பொது மக்கள் விக்ரகத்தை வெளியே எடுக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.இன்னும் ஆழமாக தோன்றி பார்தத பொழுது அந்த விக்ரகத்தின் பீடமும் அதனை அடுத்து சயனத்தி நிலையில் உள்ள துர்க்கையின் விக்ரகம் இருந்தததாம்( துர்க்கையின் பீடத்திற்கு கிழே சயன நிலையில் துர்க்கையின் திரு விக்ரக மேனி இருப்பதான சொல்வர்). அதே நேரம் நான் இந்த பகுதியை வளப்படுத்தவே வந்துள்ளேன், நின்ற நிலையில் என்னை பிரதிஷ்டை செய்யுங்கள். இந்த ஊர் மக்கள் அனைவரும் எல்லா வளமும் பெறுவார்கள் என்று அசரீரி கேட்டதாம். இதில் நெகிழ்ந்து மகிழ்ந்த ஊர் பொது மக்கள் அந்த இடத்திலேயே துர்க்கைக்கு கோயிலை எழுப்பி வழிபட தொடங்கினர்.