Screen Reader Access     A-AA+
அருள்மிகு புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், Puthur - 614402, தஞ்சாவூர் .
Arulmigu Putridamkondeswarar,Temple, Puthur - 614402, Thanjavur District [TM014158]
×
Temple History

தல பெருமை

வன்மீக நாதராம் புற்றிடங்கொண்ட பெருமானைப்பற்றிய புராண வரலாறு உண்டு. திருமால் தனது தவவலிமையால் தேவர்கள் அனைவரையும் தோற்கச் செய்து யாக குண்டத்திலிருந்து சிவதனுசு எனும் வில்லைப் பெற்றமையால் ஏற்பட்ட செருக்கால் தேவர்களை தாக்க துரத்திக்கொண்டு வந்தபோது, இறுதியில் திருவாருர் தலம் வந்தடைந்து சோர்வு அடைந்தாராம். அப்போது நாணேற்றிய வில்லைத் தரையில் ஊன்றிய வண்ணமே உறங்கிநாராம். அவ்வாறு உறங்கிய போது தேவர்கள் அனைவரும் எறும்பு உறு எடுத்து மாலவன் அறியாமலேயே வில்லின் நாணை துண்டித்தனர் என்றும் நாண் அறுந்து வில் நிமிர அவ்விசையால் திருமால் தலையகன்றதாகவும், அப்போது செய்வதறியாது அஞ்சிய தேவர்கள் கயிலைநாதனை பணிந்தனர் என்றும், உடன் ஈசனும் புற்றிடங்கொண்டார் என்ற திருநாமத்தோடு பாதாளத்திலிருந்து எழுந்தருளித் திருமாலை உயிர்ப்பித்ததோடன்றி தேவர்கள் தோற்றுவித்த...