அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், Pattukkottai - 614601, தஞ்சாவூர் .
Arulmigu Mariamman Temple, Pattukkottai - 614601, Thanjavur District [TM014166]
×
Temple History
தல பெருமை
பரம்பொருள் ஒன்றுதான் எனினும் பல்வேறு அருட்செல்வம் செய்வதற்காக அப்பரம்பொருள் பல்வேறு உருவத்திரு மேனிகளை தாங்கியுள்ளது. உலகமக்களும் ஒவ்வொரு காரியத்திற்கெனவும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
தொடங்கும் காரியம் விக்னம் இல்லாமல் முடிவதற்காக ஸ்ரீ விக்னேஸ்வரனை முதலில் வழிபடுகின்றனர். அதுபோல மழைபொழிய வேண்டும் என்பதற்காக ஒரு தெய்வத்தை வழிபடுகின்றனர். அத்தெய்வம் மாரி என அழைக்கப்படுகின்றது. மழையின்றி உலகம் இல்லை மாரியல்லாது காரியம் இல்லை. எனவே ஊர்தோறும் மாரியம்மனுக்கு கோவில் உண்டு. யார்கடன் இருந்தாலும் மாரி கடன் செலுத்த மக்கள் மறப்பதில்லை. ...பரம்பொருள் ஒன்றுதான் எனினும் பல்வேறு அருட்செல்வம் செய்வதற்காக அப்பரம்பொருள் பல்வேறு உருவத்திரு மேனிகளை தாங்கியுள்ளது. உலகமக்களும் ஒவ்வொரு காரியத்திற்கெனவும் ஒவ்வொரு தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
தொடங்கும் காரியம் விக்னம் இல்லாமல் முடிவதற்காக ஸ்ரீ விக்னேஸ்வரனை முதலில் வழிபடுகின்றனர். அதுபோல மழைபொழிய வேண்டும் என்பதற்காக ஒரு தெய்வத்தை வழிபடுகின்றனர். அத்தெய்வம் மாரி என அழைக்கப்படுகின்றது. மழையின்றி உலகம் இல்லை மாரியல்லாது காரியம் இல்லை. எனவே ஊர்தோறும் மாரியம்மனுக்கு கோவில் உண்டு. யார்கடன் இருந்தாலும் மாரி கடன் செலுத்த மக்கள் மறப்பதில்லை.
வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளிக்கும் தேவி பராசக்தி அன்பர்கள் காக்கும் அறச்செல்வியாகவும் வம்பர்களை வறுத்தும் மறச்செல்வியாகவும் அம்பாள் இங்கு விளங்கி வருவதால் இக்கோயிலுக்கு வரும் பக்தரின் எண்ணிக்கை ஏராளம். இத்திருக்கோவிலில் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ நாகர், ஸ்ரீ வீரனார், ஸ்ரீ சின்னான், ஸ்ரீ பேச்சியாயி, ஸ்ரீ காட்டேரி, ஸ்ரீ காத்தவராயன், ஸ்ரீ ஆர்யமாலா, ஸ்ரீ துரௌபதியம்மன், ஆகிய பரிவார தெய்வங்கள் அருள் பாலித்து வருகின்றனர்.