தல வரலாறு
ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்சோதியாகிய பரமேஸ்வரன் ஆன்மாக்களுய்யும் பொருட்டு எழுந்தருளியுள்ள பற்பல திவ்விய ஷேத்திரங்களில் ஒன்றாகிய அருள்மிகு ஐயாறப்பர் எழுந்தருளியுள்ள திருவையாறெனும் அற்புத ஸ்தலத்திற்குக் கீழ் திசையிலும் , வான் பொய்பினும் தான் பொய்யாத காவிரி நதிக்கு தென்புறத்திலும் அமையப்பெற்ற இலுப்பக்கோரை என்ற பெயர் விளங்கும் கடம்பவன தலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விநாயகர், அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி, அருள்மிகு திரௌபதி அம்மன், அருள்மிகு அய்யனார் திருக்கோயில் மற்றும் மதுரைவீர சுவாமி, காளியம்மன் கருப்பசாமி போன்ற தெய்வங்கள் அருள்பாளிக்கும் சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் பஞ்ச பாண்டவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்ற சிறப்பும் பெற்றுள்ளது.