அருள்மிகு சந்திரகேசரபிள்ளையார் திருக்கோயில், Ayyampettai - 614201, தஞ்சாவூர் .
Arulmigu Chandrasekara Pillayar Temple, Ayyampettai - 614201, Thanjavur District [TM014188]
×
Temple History
தல வரலாறு
கி.பி.1763 -ல் தஞ்சை ஆண்ட நாயக்க மன்னர் கெஞ்சன்னா காலத்தில் சந்திரசேகர விநாயகர் கோவில் கட்டப்பெற்றது. அய்யம்பேட்டை பகுதி நிர்வாகியாக இருந்த கெஞ்சன்னா நாயக்கர் துவாதேசி அன்னசத்திரம் மண்டபம், தர்பார் மண்டபம், லாய மண்டபங்கள், தண்ணீர் பந்தல் மண்டபங்கள் கட்டினார்கள். சந்திரசேகர விநாயகர் கோவில் ஒட்டி 1 ஏக்கர் நிலபரப்பில் தெப்பக்குளம் அகற்கு பக்கம் 1 ஏக்கர் பரப்பளவு விழாவிற்கான இடமும், அதற்கு நேரெதிரில் தோப்புகள் அமைத்து உள்ளார்கள். நந்தவனங்களும் உள்ளன. சோழ சக்ர மங்கை, அரிய மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசுபதி மங்கை, தாழ மங்கை, புல்ல மங்கை ஆகிய ஏழு சப்தமங்கையர் கோவிலும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. செஞ்சி நாயக்கர்...கி.பி.1763 -ல் தஞ்சை ஆண்ட நாயக்க மன்னர் கெஞ்சன்னா காலத்தில் சந்திரசேகர விநாயகர் கோவில் கட்டப்பெற்றது. அய்யம்பேட்டை பகுதி நிர்வாகியாக இருந்த கெஞ்சன்னா நாயக்கர் துவாதேசி அன்னசத்திரம் மண்டபம், தர்பார் மண்டபம், லாய மண்டபங்கள், தண்ணீர் பந்தல் மண்டபங்கள் கட்டினார்கள். சந்திரசேகர விநாயகர் கோவில் ஒட்டி 1 ஏக்கர் நிலபரப்பில் தெப்பக்குளம் அகற்கு பக்கம் 1 ஏக்கர் பரப்பளவு விழாவிற்கான இடமும், அதற்கு நேரெதிரில் தோப்புகள் அமைத்து உள்ளார்கள். நந்தவனங்களும் உள்ளன. சோழ சக்ர மங்கை, அரிய மங்கை, சூல மங்கை, நந்தி மங்கை, பசுபதி மங்கை, தாழ மங்கை, புல்ல மங்கை ஆகிய ஏழு சப்தமங்கையர் கோவிலும் மன்னர் காலத்தில் கட்டப்பட்டது. செஞ்சி நாயக்கர் மன்னர் காலத்தில் தனக்கும் தன் மனைவி மோகனபாய்க்கும் சிலைகள் வைத்துள்ளார்கள். இந்த கோவிலில் கலைநயம் மிக்க வேலைபாடுகள் செங்கள் கட்டுமான, சுதை வேலைபாடுகள் ஸ்ரீ சுவாமிமலை சுவாமிநாத ஒத்த வடிவமுள்ள கற்சிலையும் கலை அம்சமாகும். ஸ்ரீ சந்திரசேகர விநாயகரை தரிசனம் செய்தால் உயர்ந்த செல்வங்களும் உன்னதமான கல்வி கடவுளை நினைத்து தியானம் செய்தால் நல் கல்வியறிவும் பெற்று உயர்ந்த நிலையை அடைவார்கள்.