Arulmigu Pathaleshwarar Temple, Haridwaramangalam - 612802, Thiruvarur District [TM014436]
×
Temple History
தல வரலாறு
தஞ்சை-திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்மாப்பேட்டைக்கு வடகிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு அருகில் உள்ள மற்றொரு தலம் அவளிவநல்லூர் (2.கி.மீ) தொலைவில் உள்ளது.
வெண்ணாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்த தேவாரத் திருத்தலம்- பஞ்ச ஆரண்யத் தலங்களில் உச்சிக் காலத்தில் வழிபட வேண்டிய மூன்றாவது தலமாகும். பஞ்சவன அசஷத்திரங்களுள் மூன்றாவதான இத்திருத்தலம் வன்னி வனம் எனப்படுகிறது.
சிவபெருமானின் திருப்பாதங்களைக்காண (ஹரி) திருமால் வராஹ அவதாரமெடுத்து பூமியை துளைத்துச் சென்றதால் ஹரித்துவாரமங்கலம் என இத்தலம் பெயர் பெற்றது.
(ஹரி துவார மங்கலம்) எனவே இத்தலம் தென்னாற்காடு மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்துடனும், வடாற்காடு மாவட்டம் திருவருணையுடனும் இணைத்து பேசப்படுகிறது.
வராஹ அவதாரமெடுத்த விஷ்ணு சிவபெருமானின் திருவடிகளை தரிசிக்க சென்ற போது அத்திருவடிகள் பாதாளம் வரை தொட்டு நின்றதால் இறைவனை மக்கள்...தஞ்சை-திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள அம்மாப்பேட்டைக்கு வடகிழக்கே 8.கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு அருகில் உள்ள மற்றொரு தலம் அவளிவநல்லூர் (2.கி.மீ) தொலைவில் உள்ளது.
வெண்ணாற்றின் வடகரைப் பகுதியில் அமைந்த தேவாரத் திருத்தலம்- பஞ்ச ஆரண்யத் தலங்களில் உச்சிக் காலத்தில் வழிபட வேண்டிய மூன்றாவது தலமாகும். பஞ்சவன அசஷத்திரங்களுள் மூன்றாவதான இத்திருத்தலம் வன்னி வனம் எனப்படுகிறது.
சிவபெருமானின் திருப்பாதங்களைக்காண (ஹரி) திருமால் வராஹ அவதாரமெடுத்து பூமியை துளைத்துச் சென்றதால் ஹரித்துவாரமங்கலம் என இத்தலம் பெயர் பெற்றது.
(ஹரி துவார மங்கலம்) எனவே இத்தலம் தென்னாற்காடு மாவட்டம் ஸ்ரீ முஷ்ணத்துடனும், வடாற்காடு மாவட்டம் திருவருணையுடனும் இணைத்து பேசப்படுகிறது.
வராஹ அவதாரமெடுத்த விஷ்ணு சிவபெருமானின் திருவடிகளை தரிசிக்க சென்ற போது அத்திருவடிகள் பாதாளம் வரை தொட்டு நின்றதால் இறைவனை மக்கள் பாதாளேஸ்வரர் என்றே அழைப்பர். மூலவலிங்கம் சுயம்புமூர்த்தி இன்னும் கர்ப்பகிரகத்தில் ஹரி துளைத்துச்சென்ற இடத்தைப் பறைசாற்றும் வட்டக்கல் ஒன்று புதையுண்டிருப்பதைக் காணலாம்.
திருஞானசம்பந்தரால் பாடற்பெற்ற இத்தலம் அரதைப்பெரும்பாழி எனவும் வழங்கப்பெறும். இரண்டு ராஜ கோபுரங்களை கிழக்கிலேயே கொண்டுள்ள இத்தலத்துக்கோவிலில் அம்மை அலங்காரவள்ளி கல்யாண கோலத்தில் அதாவது இறைவனின் வலப்புறத்தே தனது சந்நிதியைக் கொண்டுள்ளது.
திருக்கோயிலின் எதிரில் உள்ளது பிரம்மதீர்த்தம். பலநூறு ஆண்டுகளாக நிற்கும் வன்னிமரம் தலவிருட்சம் ஆகும். வரலாற்று சிறப்புமிக்க திருத்தலமாகும்.