தல வரலாறு

1. இரண்டு பாடல் பெற்ற ஸ்தலங்கள் ஒருங்கே அமைய பெற்ற ஸ்தலம். 2. மூவரால் பாடல் பெற்றது, அக்னி பகவான் தவம் செய்து பாபவிமோசனம் பெற்ற ஸ்தலம். 3. மூன்று கால சிவலிங்கங்கள் உள்ள ஸ்தலம் கடந்த காலம்,நிகழ் காலம் , எதிர் காலம் . 4. அப்பர் சுவாமிகள் ஐக்கியமானதும், முருகநாயனார் அவதரித்த ஸ்தலமுமாகும். 5. சுந்தரருக்கு செங்கற்கலை பொன்கற்களாக்கி தந்த வாஸ்து ஸ்தலம். 6. இத்தல இறைவி பிரசவம் பார்த்த ஐதீகம் பெற்ற ஸ்தலம். 7.சதய மற்றும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்குரிய பரிகார ஸ்தலம். 8. திருக்கோவிலை சுற்றி அகழி உள்ள ஸ்தலம்.