Arulmigu Vedaranyeswaraswamy Temple, Vedaranyam, Vedaraniyam - 614810, Nagapattinam District [TM014589]
×
Temple History
தல வரலாறு
இத்தலம் புராண காலத்திற்கும் முந்தையது. அகத்தியர் போன்ற முனிவர்களும், தசரதன், விசுவாமித்திரன், இராமபிரான், வசிட்டர் போன்ற இதிகாசகாலத்து பெருமக்களும், முசுகுந்தச் சக்ககவர்த்தி போன்ற புராண காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் வழிபடப்பெற்றது. சைவத் திருமறைகள் நான்கும் இத்தலத்தை மறைக்காடு, மறைவனம், வேதவனம் எனறு போற்றி. புகழ்கின்றன. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.
வேதங்கள் நான்கும் மனித உருகொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோயிலின் வடக்குபுறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இத்திருக்கோயில் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடிய பின்னர்...இத்தலம் புராண காலத்திற்கும் முந்தையது. அகத்தியர் போன்ற முனிவர்களும், தசரதன், விசுவாமித்திரன், இராமபிரான், வசிட்டர் போன்ற இதிகாசகாலத்து பெருமக்களும், முசுகுந்தச் சக்ககவர்த்தி போன்ற புராண காலத்து மன்னர்களும், பின்னர் வாழ்ந்த சேர சோழ பாண்டிய மன்னர்களாலும் வழிபடப்பெற்றது. சைவத் திருமறைகள் நான்கும் இத்தலத்தை மறைக்காடு, மறைவனம், வேதவனம் எனறு போற்றி. புகழ்கின்றன. தேவாரத்தின் ஏழு திருமுறைகளிலும் பதிகம் பெற்ற சிறப்பான தலம் இது.
வேதங்கள் நான்கும் மனித உருகொண்டு இத்தலத்தை இத்தலத்திற்கு அண்மையில் உள்ள நாலுவேதபதி என்கிற ஊரில் தங்கி அருகாமையில் உள்ள புஷ்பவனம் என்கிற ஊரில் மலரெடுத்து வந்து திருக்கோயிலின் வடக்குபுறம் நகரத்தை ஒட்டி அமைந்துள்ள வேதாமிருத ஏரியில் நீராடி இத்திருக்கோயில் அமைந்துள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடிய பின்னர் இத்தலத்து இறைவனை போற்றி வழிபாடுகள் செய்தன. பின்னர் இத்தலத்தின் பிரதான வாயிலை அடைத்துவிட்டு சென்றுவிட்டன. இன்னும் இத்தலத்தைச் சுற்றிலும் வேதங்கள் மரம், செடி வனமாக இருந்து இறைவனை வழிபாடு செய்து வருவதாகக் கருதப்படுகிறது. பிரதான வாயில் அடைக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் பக்கத்திலுள்ள திட்டிவாயில் வழியாக வந்து இறைவனை வழிபட்டு வந்தனர். பின்னர் இத்தலத்திற்கு வருகை தந்த திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் தேவாரத் தமிழ்ப்பதிகம் பாடித் திறக்கவும், மீண்டும் திருக்கதவு தாள் செய்யப்படுதலும் நிகழ்ந்தன. இவ்வாறு வடமொழியும், தென்தமிழும் வழிபாட்டு ஆற்றலில் ஒன்றே என நிரூபணம் ஆகிய இடம் இவ்வூர்.
இவருக்கு மறைக்காட்டுறையும் மணாளர் என்று பெயர். சிவப்பரம்பொருளின் திருமணக்கோலத்தை காண தேவரும், முனிவரும், பிறரும் வடதிசையில் ஒருங்கே கூடியதால் வடதிசை தாழ்ந்தும், தென்திசை உயர்ந்தும் காணப்பட்டது. ஏற்றத் தாழ்வை சமன் செய்ய இறைவன், அகத்திய மாமுனிவரை தென்திசைக்கு அனுப்பினார். அகத்திய மாமுனிவர் தாங்கள் மணக்கோலத்தை காணும் பாக்கியம் எனக்கில்லையா என வினவ அதற்கு இறைவனும் வேதங்கள் வழிபட்ட வேத வனத்தில் தரிசனம் தருவதாக வாக்களித்தார். அவ்வாறே அகத்திய மாமுனிவர் இங்கு வந்து தங்கி தவம் செய்து வந்தார். இந்த இடம் இப்போது அகஸ்த்தியன்பள்ளி என அழைக்கப்படுகிறது.
இறைவனும்வாக்களித்தபடி அகத்திய மாமுனிவருக்கு தமது திருமணக்கோலத்தினை, சித்திரை மாதம் வளர்பிறையில் சப்தமி திதியில் உச்சிகாலத்தில் இத்தலத்தில் காட்டி அருளினார். இந்த காட்சியின்படி கருவறையில் சிவலிங்கத் திருமேனிக்குப் பின்னர் இறைவனும், இறைவியும் திருமணக் கோலத்தில் படைப்புச் சிற்பங்களாக எழுந்தருளியுள்ளனர். இந்தத் திருமணத் திருவிழா ஒவ்வோராண்டும் சித்திரைத் திங்களில் இத்தலத்தில் நிகழ்த்திக் காட்டப்பெறுகிறது. அதனால் இறைவன் மறைக்காட்டுறையும் மணாளர் என வழங்கப்படுகிறார். இத்தலத்தில் காமிகா.ஆகம வேதப்படி ஆறுகால பூஜைகள் சிறப்புடன் நடைபெறுகின்றது. இத்தலத்தில் இறைவனின் கருவறையில் அனைய இருந்த விளக்கின் தீபத்தில் எலியின் மூக்கு சுட்டிட சுடர்விட்டு எரிந்தது. அந்த எலியை மறுபிறவியில் இறைவன் மகாபலிஸ்வர சக்கரவர்த்தியாக்கிய தலம் இத்தலமாகும்.
வேதாரண்யம் விளக்கழகு என்பது பிரசித்தம். மாலை வேளை வழிபாட்டின் போது வரிசையாக சரவிளக்குகள் ஏற்றி இறைவழிபாடு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இத்தலம் சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு இந்திரன் அளித்த தியாகமூர்த்திங்களுள் ஒன்று. இவர் செய்யும் நடனம் அம்ச நடனம் எனப்படும்.
தேவலோகத்தில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போர் நடக்கும்பொழுது பூலோகத்திலிருந்து முசுகுந்தச்சக்கரவர்த்தி தேவலோகம் சென்று தேவர்களுக்கு ஆதரவாக போரிட்டு வெற்றி பெற்றதன் காரணமாக இந்திரன் அளித்த ஏழு விடங்கர்களில் ஒன்றான மரகதலிங்கம் இத்தலத்தில் முசுகுந்த சக்கர்வர்த்தியினால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.