தல வரலாறு
கி.பி 4 ம் நூற்றாண்டில் சோழமன்னன் செம்பியன் கோட்செங்கசோழனால் கட்டிய மாடக்கோயிலாகும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்றதும் இத்திருத்தலம். சூரியன் வழிபட்டு அதனால் ஏகசக்கரபுரம் என்று பெயர் பெற்றதும், எளிய கரிக்குருவிக்கு இரங்கி அதனை வலியனாக்கி அருளியதால் வலிவலம் என பெயர் பெற்றது.