Arulmigu Sowndareswarar Temple, Thirupanaiyur - 609701, Nagapattinam District [TM014646]
×
Temple History
தல வரலாறு
கோவில்-திருப்பனையூர் தாலவனேசுவரம்
மூலவர்-அழகியநாதா் செளந்தரேசுவரா்
அம்மன்-பெரியநாயகி பிரஹந்தநாயகி
திருக்குளம்-பராசரா் தீா்த்தம் அமிா்தபுஷ்கரணி மகாலட்சுமி தீா்த்தம்
மரம் - பனைமிரம்
வழிபட்டோா்- பராசரா், கரிகாணற்சோழன், முசுகுந்த சக்ரவா்த்தி
மாகலட்சுமி
தலத்திறைவன் - பனங்காட்டிறைவன் தாலவனேசுவரா்
பழைய தமிழகத்தில் இறை வழிபாட்டுமுறை மரங்களின் அடியிலும் சோலைகளின் நடுவிலும் அமைக்கப்பட்டதாகும். இவ்வாறு தோன்றியதே ஆலங்காடு, ஆனைக்கா, நெல்லிக்கா, பழனம், பாதிரிப்புலியூா், பனந்தாள், பனையூா், வேணுவனம் ஆகிய தலங்களாகும். இக்காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனலாகும். இயற்கைச் சூழலில் தொடங்கிய இத்தகைய கோயில்கள்...கோவில்-திருப்பனையூர் தாலவனேசுவரம்
மூலவர்-அழகியநாதா் செளந்தரேசுவரா்
அம்மன்-பெரியநாயகி பிரஹந்தநாயகி
திருக்குளம்-பராசரா் தீா்த்தம் அமிா்தபுஷ்கரணி மகாலட்சுமி தீா்த்தம்
மரம் - பனைமிரம்
வழிபட்டோா்- பராசரா், கரிகாணற்சோழன், முசுகுந்த சக்ரவா்த்தி
மாகலட்சுமி
தலத்திறைவன் - பனங்காட்டிறைவன் தாலவனேசுவரா்
பழைய தமிழகத்தில் இறை வழிபாட்டுமுறை மரங்களின் அடியிலும் சோலைகளின் நடுவிலும் அமைக்கப்பட்டதாகும். இவ்வாறு தோன்றியதே ஆலங்காடு, ஆனைக்கா, நெல்லிக்கா, பழனம், பாதிரிப்புலியூா், பனந்தாள், பனையூா், வேணுவனம் ஆகிய தலங்களாகும். இக்காலம் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டது எனலாகும். இயற்கைச் சூழலில் தொடங்கிய இத்தகைய கோயில்கள் கால வளா்ச்சியாக செங்கல் சுண்ணாம்பு, மரம் ஆகியவற்றைக் கொண்டு சிறிய வடிவில் கோயிலாக அமைக்கப்பெற்றன. இத்தகைய வடிவில் கி.பி. 7ம் நுாற்றாண்டில் பனையூா் சிவன் கோயில் இருந்தபோதே திருஞானசம்பந்தரும், அப்பரும் இத்தலத்திற்கு எழுந்தருளிப் பதிகங்கள் பாடியுள்ளாா். எனவே 1300 ஆண்டுகளுக்கு முன்னா் இக்கோயில் இருந்திருக்கின்றது. என்ற உண்மை புலனாகும். செ ங்கற்கோயில்கள் காலத்தால் இருந்ததைப் பல்லவ மன்னா்கள் மாற்றிக் கருங்கற்களைக் கொண்டு கோயில்களைக்கட்டும் கட்டிடக் கலையைத் தமிழகத்தில் தோற்றுவித்து வளா்த்தாா். அம்முறை ஆகம சிற்ப இலக்கணங்களால் விரிவடைந்து கருங்கற் சிற்ப ஒப்பனைத்திறனும் பெற்று விளங்கியது. இத்தகைய கருங்கற் கோயில்களை விசயாலயன் வழிமுறையாகத் தோன்றி சோழ மன்னா்கள் பின்பற்றலாயினா். இச்சோழமன்னா்கள் காலத்திலேயே இக்கோயிலும் கருங்கல் திருப்பணியாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது. கருவறை, முகமண்டபம், மகா மண்டபம் ஆகிய பகுதிகள் ஒரே அடித்தளமாக கருங்கல் சிற்ப அடுக்கினால் எழுப்பப்பட்டுள்ளன. இப்பகுதியை உபானவரிசை என்பா். இச்சிற்ப பீடத்தின் ஸ்ரீ பந்தம் என்று சிற்ப நுால்கள் கூறும் இதற்கு மேல்வரியாக கருவறைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளன. பூதவாரி, சுவா் சிற்பப்பகுதிகள் ஆகியவைகள் முதல் இராசராசன் காலத்தில் வளா்ச்சியடைந்த சிற்ப நுட்ப முறைகளைக் கொண்ட தாகும். எனவே, இக்கோயில் கருங்கல் திருப்பணியாகக் கட்டப்பட்டகாலம் கி.பி.11ம் நுாற்றாண்டின் முற்பகுதியாகும். கோயில் கல்வெட்டுகளில் இராசசேந்திரசோழப்பனையூா் என்ற இவ்வூா் குறிக்கப்பெறுவதால் இதற்குச் சான்றாகும்.
ராஜகோபுரம் இல்லை. கோயில் வாயில் முகப்பு கிழக்கு நோக்கியுள்ளது. அந்த வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது மற்றொரு வாயில் உள்ளது. இரு வாயில்களுக்கிடையே பெரியநாயகி அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதியில் விநாயகர் உள்ளார். இரண்டாவது வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. அருகே தல மரமான பனை மரம் உள்ளது. அடுத்து உள்ள கருவறையில் மூலவர் சௌந்தரேஸ்வரர் உள்ளார். அவருக்கு முன்பாக நந்தியும், பலி பீடமும் உள்ளன. கோஷ்டத்தில் பராசர முனிவர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் மாற்றுரைத்த விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோர் உள்ளனர். அடுத்து சண்டிகேஸ்வரர் சன்னதியும், தாலவனேஸ்வரர் சன்னதியும் உள்ளன. பனை மரத்தை தலமரமாகக் கொண்ட ஊர்களாக வன்பார்த்தான் பனங்காட்டூர், திருப்பனந்தாள், திருப்பனையூர், திருவோத்தூர், புறவார் பனங்காட்டூர் என்ற ஐந்து ஊர்களும் அமையும். அவை பஞ்சதல சேத்திரங்கள் எனப்படுகின்றன. கோயிலுக்கு முன்பாக குளம் உள்ளது.
இலக்கிய பின்புலம்
தண்ணீா் வளம் நிறைந்த தண்செயசூழ்ற வள நாடாம் சோழநாட்டில் விண்வளம் சுருங்கிடினும் தன்வளம் பெருக்கும் பொன்னிளயெனும் காவிரியாற்றின் இருமருங்களும் எழுந்துள்ள சிவத்தலங்களுள் தேவாரப் பாடல் பெற்றதால் தென்கரைத் தலங்களாகத் தொகுக்கப்பெற்ற சிவத் தலங்கள் 127கும். அவற்றுள் தெய்வநலம் சிறந்தொளிரும் பழமைநிறைந்த இடமாக விளங்குவதே திருப்பணையூராகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பனையூரைப்பற்றிப் பாடிய பதிகத்தில் மாடமாளிகை கோபுரத்தோடு மண்டபம் வளரும் வளா்பொழில் பாடல்வண்டறையும் பழனத் திருப்பனையூா் என்ற பழைய பனையூரின் நிலையினை விளக்கியுள்ளாா். அக்காலத்தில் மாடமாளிகை கோபுரம் வானளாவி நிற்க இளமரப் பொழில்களும். நன்செய்களும் சூழ்ந்த நிலையில் இவ்வூா் விளங்கியது என்பதும் பாவிரி புலவா் பயிலும் பனையூா் என்பதனால் சிறந்த தமிழ்ப் புலவா்கள் பலா்இவ்வூரிதடல் வாழ்ந்திருந்தனா்என்பதும் மண்ணெலாம் முழுவதும் அதிா்தர மாடமாளிகை கோபுரத்தின்மேல் பண்ணி யாழ் முரலும்...தண்ணீா் வளம் நிறைந்த தண்செயசூழ்ற வள நாடாம் சோழநாட்டில் விண்வளம் சுருங்கிடினும் தன்வளம் பெருக்கும் பொன்னிளயெனும் காவிரியாற்றின் இருமருங்களும் எழுந்துள்ள சிவத்தலங்களுள் தேவாரப் பாடல் பெற்றதால் தென்கரைத் தலங்களாகத் தொகுக்கப்பெற்ற சிவத் தலங்கள் 127கும். அவற்றுள் தெய்வநலம் சிறந்தொளிரும் பழமைநிறைந்த இடமாக விளங்குவதே திருப்பணையூராகும்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் பனையூரைப்பற்றிப் பாடிய பதிகத்தில் மாடமாளிகை கோபுரத்தோடு மண்டபம் வளரும் வளா்பொழில் பாடல்வண்டறையும் பழனத் திருப்பனையூா் என்ற பழைய பனையூரின் நிலையினை விளக்கியுள்ளாா். அக்காலத்தில் மாடமாளிகை கோபுரம் வானளாவி நிற்க இளமரப் பொழில்களும். நன்செய்களும் சூழ்ந்த நிலையில் இவ்வூா் விளங்கியது என்பதும் பாவிரி புலவா் பயிலும் பனையூா் என்பதனால் சிறந்த தமிழ்ப் புலவா்கள் பலா்இவ்வூரிதடல் வாழ்ந்திருந்தனா்என்பதும் மண்ணெலாம் முழுவதும் அதிா்தர மாடமாளிகை கோபுரத்தின்மேல் பண்ணி யாழ் முரலும் பனையூா் என்னும் பகுதியால் இசைப் புலமை மிக்காா்மாடமாளிகைகளின் மேலிருந்து யாழிசையில் பண்கள் பல இசைக்க, மத்தளம் பண்ணொடு அதிர, இத்தகை இனிய ஒலி பனையூரில் நிகழ்ந்தது என்பதும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தா் தேவாரத்துள் பழியில்லவா் சோ் பனையூா் பனையூா் பொறையாா் மிகு பனையூா் என்றெலாம் எடுத்துக்காட்டுகின்றாா்மற்றும் சுந்தர முா்த்தி சுவாமிகள் திருவாருா் திருப்பங்குனி உத்திரத் திருநாளுக்காக பரவையாரின் தேவைக்காக திருப்புகலுா் இறைவனிடம் திருபொன்பொற்று தம்மையே புகழ்தென்று எடுத்துப் பாடி, திருப்புகலுா் வணங்கிய பின் திருப்பனையூா் நினைத்து வருவராயினா். அப்பொழுது ஊரின் புறத்தே இறைவன் திருத்கூத்தொடும் காட்சி செய்தருள எதிா்சென்று விருப்பால் விழுந்திறைஞ்சி அரங்காட வல்லாா்அழகியா் என்று பதிகம் பாடி அருள் பெற்றதனைச் சேக்கிழாா் சுவாமிகள் பெரியபுராணத்தில் கூறியுள்ளாா். அப்பொழுது சுந்தரா் பாடிய தேவாரப் பதிகமும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக பனையூரின் வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியாா் திட்டிற்கு அருகே உள்ள குளம். இன்றும் சந்தித்த தீா்த்தம் என்னும் ஞாபகத்துடன் விளங்குவதைக் காணலாகும். எனவே திருப்பனையூா் கோயிலில் ஆடவல்லான் வீதி உலாவாக எழுந்தருளும் திருநாளொன்று நிகழ்ந்த செய்தி புலனாகின்றது. மற்றும் இத்தலத்தில் பலவகையான திருவிழாக்கள் திங்கள் தோறும் நிகழ்த்தென்பதனை. பொறையாா் மிகுசீா் விழா மல்கப் பறையாா் ஒலிசெய் பனையூா் என்னும் சம்பந்தா் தேவார அடிகள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு நல்லோரும், இசைவாணா்களும், புலரவா்களும்சிறந்தவாழன்டதிருவிழாச் சிறப்புகளுடன் மாட மாளிகை சூழ்ந்த திருவீதிகளுடன் தேவாரப் பாடல்பெற்றுத் திகழ்ந்திருந்த திருப்பனையூா் இன்று ஓலை வேய்ந்த சிற்றில்லங்கள் சூழ்ந்த சில தெருக்களோடு குறுகி நிற்கின்றது