Screen Reader Access     A-AA+
அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல் - 609702, நாகப்பட்டினம் .
Arulmigu Raththinagireeshwara Swamy Temple, Thirumarugal - 609702, Nagapattinam District [TM014693]
×
Temple History

தல வரலாறு

அங்கிங்கெனாதபடி பரமாகாச ஒளிவடிவாய் நீக்கமற எங்கும் நிறைந்து சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் இப்பூவுலகில் அநேகம். மாதவம் செய்த தென்திசையாம் தமிழகத்தில் நால்வர் பெருமக்களால் பாடல் பெற்ற தலங்கள் மிகப்புனிதமானவைகளாகக் கருதப்படுகின்றன. தமிழ் வேதம் எனும் பன்னிரு திருமுறைகளின் சிறப்பு மற்றெந்த மொழிகளிலும் காணப்படாமையினாலேயே பாடல் பெற்ற தலங்கள் சிறப்புடையனவாகின்றன. அவற்றுள் காவிரித் தென்கரைத் தலங்களில் மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகையாலும் சிறப்புடைய பதினெட்டு தலங்களில் முக்கியமானதும், கதலிவனம் என அழைக்கப்பட்டதுமான இத்திருத்தலத்தில், முன்னொரு காலத்தில் மருகல் என்ற ஒரு வகை வாழை வனமாக இருந்ததால் இத்தலத்திற்கு திருமருகல் என்ற பெயர் வரக் காரணமாயிற்று. இத்தலத்து விருட்சம் மருகல் இன வாழை...

தல பெருமை

சோழநாட்டில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறந்து விளங்கும் பதினெட்டு ஸ்தலங்களில் முக்கியமானதும் காதலிவனம் என்று அழைக்கப்படும் திருமருகல். விழா நடத்தி பிரம்மா அருள் பெற்ற ஸ்தலம். பாம்பு தீண்டி இறந்த வணிகனை திருஞானசம்பந்தம் பதிகம் பாடி உயிர்ப்பித்து மணம் முடித்து வைத்ததால் இது திருமண தடை நீக்கும் ஸ்தலமாகும். மன அமைதி இழந்த யோகி பராசரர் அமைதி பெற்றதும். மன்னன் குசகேதுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பஞ்சம்நீக்கிட இரத்தின மழை பெய்வித்ததால் வறுமை நீங்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. மேலும் இத்திருக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற திருக்கோயில் ஆகும்.