தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், சூழியக்கோட்டை கிராமத்தில் , சாலியமங்கலம் பஸ் நிறுத்ததில் இருந்து 2 கி.மீ தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இறைவன் பெயர்: மதுரை வீரன் இத்திருக்கோயிலில் ஆண்டு தோறும் தீபாவளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் விமர்சையாக உபயதாரர்கள் பங்களிப்புடன் நடைப்பெறும். இத்திருக்கோயில் சார்ந்த கல்வெட்டுகள், சுவரோவியங்கள் ஏதும் இல்லை எனவே திருக்கோயில் பற்றிய தொன்மையான வரலாறு மற்றும் புராணங்கள் ஏதும் அறிய இயலவில்லை. இத்திருக்கோயிலில் மூல கடவுளான அய்யனாரை கிராம மக்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர்.