தல பெருமை
இத்திருக்கோவில் இவ்வூரின் கிராம மக்களுக்கு காவல் தெய்வமாகவும், குலதெய்வமாகவும் வைத்து காலம்காலமாக வழிப்பட்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகாதவர்கள் மற்றும் குழந்தைபேறு இல்லாதவர்கள் இக்திருகோவிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் ப்ராத்தனை நிறைவேறும் என்பது இவ்வூர் மக்களால் நம்பப்படுகிறது. இண்டடி மரத்துக்கீழ் கோவில் அமைந்துள்ளதால் இக்கோவிலுக்கு இண்டடி கருப்பு என்று இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது. கருவரையிலுள்ள மூர்த்தியை இவ்வூர் மக்கள் ஹரிஹரபுத்ர சுவாமியாக வழிப்பட்டு வருகின்றனர்.