அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில், அமைந்தகரை, சென்னை - 600029, சென்னை .
Arulmigu Prasanna Varatharaja Perumal Temple, Aminjikarai, Chennai - 600029, Chennai District [TM000158]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முற்பபட்டது. சென்னை , அமைந்தகரையில் கூவம் நதிகரையோரம் அமையப்பெற்றது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் தன்னுடைய குமாரர்களான லவன், குசன், இருவரையும் தேடிகொண்டு வரும்போது மிகவும் களைப்படைந்து நதிக்கரையோரம் அமர்ந்ததாகவும் அதனால் இவ்விடத்திற்ககு அமர்ந்தகரை என்றும் பின்பு அமிஞ்சிரை, அமைந்தகரை என்றும் மருவியதாக ஆன்றோர்கள் கூறுவர்.
பெருமாள் மூலவர் அருள்மிகு பிரசன்ன வரதராஜர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பெருந்தேவித்தாயார் , ஸ்ரீ ஆண்டாள் , ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ராமானுஜருக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர், அயோத்தி ஸ்ரீ ராமர்...அருள்மிகு பிரசன்ன வரதராஜப் பெருமாள் திருக்கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முற்பபட்டது. சென்னை , அமைந்தகரையில் கூவம் நதிகரையோரம் அமையப்பெற்றது. ஸ்ரீ ராமாயணத்தில் ஸ்ரீ ராமன் தன்னுடைய குமாரர்களான லவன், குசன், இருவரையும் தேடிகொண்டு வரும்போது மிகவும் களைப்படைந்து நதிக்கரையோரம் அமர்ந்ததாகவும் அதனால் இவ்விடத்திற்ககு அமர்ந்தகரை என்றும் பின்பு அமிஞ்சிரை, அமைந்தகரை என்றும் மருவியதாக ஆன்றோர்கள் கூறுவர்.
பெருமாள் மூலவர் அருள்மிகு பிரசன்ன வரதராஜர் என்ற திருநாமம் தாங்கி நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ பெருந்தேவித்தாயார் , ஸ்ரீ ஆண்டாள் , ஸ்ரீ ஆஞ்சநேயர் மற்றும் ராமானுஜருக்கு தனிச்சன்னதிகள் உள்ளது. இத்தலத்தில் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர், திருப்பதி ஸ்ரீ ஸ்ரீனிவாசர், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜர், அயோத்தி ஸ்ரீ ராமர் மற்றும் மதுரா ஸ்ரீ கண்ணன் ஆகிய ஐந்து திவ்யதேசத்து எம்பெருமான்களுக்கும் ஆண்டு முழுவதும் பல்வேறு உத்ஸவங்களும் வெகுசிறப்பாக நடைபெற்றுவருகிறது.
இங்குள்ள ராஜகோபுரத்தின் முதல் நிலையின் இருபுறமும் ரதம் போன்ற அமைப்பு காணப்படுகின்றது. ஓம் வடிவத்திலுள்ள ப்ரணவாகார விமானம் கொண்டது.
இத்திருக்கோயில் தென்கலை ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயமும் ஸ்ரீ பஞ்சராத்ர ஆகம பூஜை முறையும் பின்பற்றப்படுகிறது.ஸ்தல விருட்சமாக மாமரம் உள்ளது.
1950 ல் நடைபெற்ற இத்திருக்கோயிலின் மஹா ஸம்ப்ரோக்ஷண வைபவத்தில் பக்கத்திளுள்ள திவ்யதேசமான திருநின்றவூர் ஸ்ரீ பக்தவசல பெருமாள் எழுந்தருளியுள்ளது மிகவும் விஷேசமாகும்.
மேலும் 1954ல் ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் (அர்ச்சை) எழுந்தருளி மங்களாஸாஸணம் செய்ததும் மிகவும் சிறப்புடையதாகும். இத்திருக்கோயில் தமிழ்நாடு அரசு சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
இத்திருகோயிலில் அனைத்து சன்னதிகள் பழுதுபார்க்கப்பட்டு கடந்த 23.05.2004 அன்று திருக்குடமுழுக்கு நடைபெற்றது.