Screen Reader Access     A-AA+
அருள்மிகு மாந்தி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Manthi Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001656]
×
Temple History

தல வரலாறு

ஒரு காலத்தில் மாய அசுரன் என்ற அசுரன் பிரம்மா விஷ்ணு சிவன் இம்மூவரிடமும் சாகாவரம் பெற்றவன். அந்த அசுரன் இவ்வூர் மக்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். இக்கொடுமையை பொறுக்க முடியாமல் இவ்வூர் மக்கள் அருள்மிகு சோலை அம்மனிடம் முறையிட்டனர். சோலை அம்மன் நான் விஷ்ணு அவதாரமாக உள்ளதால் என்னால் அசுரனை அழிக்க முடியாது. எனவே என் தங்கையான மாந்தி அம்மனிடம் முறையிடுங்கள் என்றவுடன் மக்கள் மாந்தி அம்மனிடம் முறையிட்டார்கள். அம்முறையீட்டினை ஏற்று மாந்தி அம்மன் மாங்காட்டிற்கு வந்து சேர்ந்தாள். மாய அசுரன் உரு மாறும் சக்தி பெற்றவன். எந்த வடிவத்திலும் உரு மாறுபவன். மாந்தி அம்மனை பார்த்த அசுரன் காற்று, மரம், யானை, சிங்கம் என பல்வேறு வடிவங்களை எடுத்தான்....