அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில், பெரிய காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Vaigunthaperumal Temple, Periya Kancheepuram - 631502, Kancheepuram District [TM001663]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு.
காஞ்சிபுரம் நகர் அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். வைணவத் திருத்தலங்களில் 56வது திவ்விய தேசமாகவும் காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திற்கு வட கிழக்கில் ரயில் நிலையத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது.வைகாணச ஆகமம்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இப்பெருமாள் மானுடர்க்கு வைகுண்ட பதவியினை அளிக்க வல்ல பெருமாள் என்பதால் வைகுண்ட பெருமாள் என்னும் பெயர் வழங்க எழுந்தருளியுள்ளார். நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் ஸ்ரீ முகந்த விமானத்தின் கீழ் பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரத்துடன், மேற்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பல்லவ மன்னர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சிற்பங்கள் மற்றும் சுதை...அருள்மிகு வைகுண்டப் பெருமாள் திருக்கோயில் தலவரலாறு.
காஞ்சிபுரம் நகர் அருள்மிகு வைகுண்டபெருமாள் திருக்கோயில் பழமையும், பெருமையும் வாய்ந்த திருக்கோயிலாகும். வைணவத் திருத்தலங்களில் 56வது திவ்விய தேசமாகவும் காஞ்சிபுரம் பரமேஸ்வர விண்ணகரம் எனவும் வழங்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்திற்கு வட கிழக்கில் ரயில் நிலையத்திற்கு மேற்கில் அமைந்துள்ளது.வைகாணச ஆகமம்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இப்பெருமாள் மானுடர்க்கு வைகுண்ட பதவியினை அளிக்க வல்ல பெருமாள் என்பதால் வைகுண்ட பெருமாள் என்னும் பெயர் வழங்க எழுந்தருளியுள்ளார். நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் ஸ்ரீ முகந்த விமானத்தின் கீழ் பெருமாள் எழுந்தருளியுள்ளார். ஆலயத்தின் முகப்பில் ராஜகோபுரத்துடன், மேற்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பல்லவ மன்னர்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்த சிற்பங்கள் மற்றும் சுதை வேலைபாட்டுடன் காணப்படுகிறது. அவைகளின் சிறப்பால் தற்சமயம் தொல்பொருள் துறையின் பாதுகாப்பில் எடுத்துக் கொள்ளப்பட்டு பராமரித்து வரப்படுகிறது.
நாலாயிர திவ்ய பிரபந்தம் பெரிய திருமடல் இரண்டாம் பத்து 9-வது சதகத்தில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.
முன்னொரு காலத்தில் பூவுலகின், கோயில் மாநகராய் அமைந்துள்ள காஞ்சியம்பதியின் மேன்மையறிந்த முக்கடவுளராம், ஈஸ்வரன், திருமால், பிரம்மா மூவரும் இத்தலத்திற்கு வந்துதுதித்து, வளம்மறிய வலம் வந்தபோது, மகரிஷிகளும் தேவாதி தேவர்களும் முக்கடவுளரை தரிசிக்க கூடினார்கள். ஆனால் பரத்வாஜ முனிவர் மட்டும் தவம் செய்வதில் கண்ணாயிருந்து முக்கடவுளரின் இருப்பிடம் தேடிவராமல் இருந்ததாகவும், இது குறித்து ஈஸ்வரன் மிகவும் கோபம் கொண்டு அவரது தவம் கலைக்க, ரம்பா, ஊர்வசி முதலானோரை அனுப்பினார். அந்த வகையில் பரத்வாஜ் முனிவருக்கு பிறத்த குழந்தையே பரமேஸ்வரர் என்ற பெயரில் வளர்ந்து பின்னர் திருமால் கருணையால் அரசனாக உருப்பெற்றான் எனவும், அவனுக்கு வைகுண்ட பதவியளித்து அருளிய பெருமாளாக திருமால் இங்கு எழுந்தருளி உள்ளார். அதன் காரணமாகவே பரமேஸ்வர விண்ணகரம் என்ற பெயருடன் வரலாயிற்று.
இத்திருக்கோயில் கட்டுமான பல்லவர் காலத்தியவை கி.பி.6ம் நூற்றாண்டு 7-ம் நூற்றாண்டில் இரண்டாம் பரமேஸ்வரவர்மன் ஆட்சிகாலத்தில் துவக்கப்பட்டு, இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் முடிக்கப்பட்டதாக தொல் பொருள்துறை ஆய்வின் மூலம் தெரியவருகிறது.
ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி, வைகாசி பிரம்மோத்ஸவம், கிருஷ்ண ஜெயந்தி ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
வரலாற்றுக்குறிப்பு:
வைகுந்த பெருமாள் கோயில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனால் பரமேசுவர விண்ணகரம் என்ற பெயரில் எடுக்கப்பட்டது. திருமங்கையாழ்வார் இப்பெருமானை பல்லவர்கோன் பணிந்த பரமேசுவர விண்ணகரம் இதுவே என்று பாடி மங்களாசாசனம் செய்துள்ளார். பல்லவர்களின் வரலாற்றை விளக்கும் சிற்பங்கள் பொறிப்புடன் உள்ளன. முதலாம் குலோத்துங்க சோழானால் வழிபாடுகள் தொடர தானம் அளிக்கப்பட்டன என்பதை அறியமுடிகிறது. இக்கோயில் கருவறை மூன்று அடுக்காக திருமாலின் அமர்ந்த, சயன, நின்ற கோலத்தில் வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.