தல வரலாறு

வானகம் வையகம் யாவுமாய் நின்று காத்து நிற்கும் எல்லையம்மன் இவ்வூரை எல்லையில் நின்று காத்து நிற்கிறாள். இவ்வெல்லையம்மன் மரசிற்பமாய் அழகாய் அருள்பாலிக்கிறாள் இவ்வம்மனுக்கு அனைத்து வெள்ளி செவ்வாய்கிழமைகளிலும் ஆடிமாதம் முழுவதும் சிறப்பு ஆராதனை பூஜைகளும் நடைபெறுகிறது. இந்த அம்மன் அதிகமான பக்தர்களுக்கு குலதெய்வமாய் திகழ்வதால் ஆடிமாதம் முழுவதும் வெகுவிமர்சனையாய் கொண்டாடபட்டு சிறப்பாய் அருள்பாலிக்கிறாள். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆட்டுப்புத்தூர் கிராமத்தில் உள்ளது.