தல வரலாறு

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் மாதனபாளையத்தெருவில் மிகப்பழமையான அம்மன் திருக்கோயில் கொண்டுள்ளார். காடு என்றால் வனம். இந்த வனத்தில் இருந்து வடக்குநோக்கி அந்த அன்னை அருள்பாலித்து வருகிறாள். அந்த அன்னையை தரிசனம் செய்த பக்தர்கள் அத்தனை பேருக்கும் நீடித்த நோயற்ற வாழ்வும் நிறைந்த பேரும் அருள்வாள். காஞ்சியில் கோயில் கொண்டுள்ள 8 காளியம்மன்களில் ஒன்றாக திகழ்வது காடுகாளியம்மன் திருக்கோயில் ஆகும்.