Screen Reader Access     A-AA+
அருள்மிகு ஓணகாந்தீஸ்வரர் திருக்கோயில், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Onagantheshwarar Temple, Panjupettai, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001707]
×
Temple History

தல வரலாறு

தமிழகத்தின் ஆன்மிக நகரமான காஞ்சிபுரத்தில் தேவாரப்பாடல் பெற்ற ஐந்து சிவாலயங்களில் முக்கியமானது ஓணகாந்தன் தளி கோயிலாகும். இங்குள்ள இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 235வது தேவாரத் தலம் ஆகும். காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சி தனிக்கோயில் இருக்கிறது. அவளே சர்வவியாபி என்பதால், இன்னரிலுள்ள எந்த சிவாலயத்திலும் அம்மன் சன்னதி கிடையாது. ஓணகாந்தேஸ்வரர் கோயிலிலும் இக்கோயிலை ஒட்டி அமைந்துள்ளது ஓணகாந்தன் தளி கோயிலிலும் அம்மன் இல்லை. இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார். சுந்தரர் எந்த தலத்தில் அருளிய பகுதி பாடல்கள் இத்தலத்திலேயே கிடைக்கிறது. எதை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. மூன்று நிலை ராஜகோபுரத்தை கண்டத்து உள்ளே சென்றால், தனித்தனி சன்னதிகளில் மூன்று லிங்கங்களும் மூன்று...