தல வரலாறு
அருள்மிகு கிருஷ்ணசுவாமி மற்றும் கோதண்டராமசுவாமி திருக்கோயில் 1898-ம் ஆண்டு குழந்தை வரம் வேண்டி கட்டப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் கிழக்கு திசை நோக்கியபடி கற்பக்ரஹம், அந்தராளம், முகமண்டபம், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ கருடன், த்வஜஸ்தம்பபீடம், பலிபீடம், வடக்கில் துருக்கல்லால் ஆன படிகளுடன் கூடிய குளம் முதலானவற்றுடன் அமைந்துள்ளது.