Screen Reader Access     A-AA+
அருள்மிகு பச்சை வண்ணர் மற்றும் பவள வண்ணர் சுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் - 631502, காஞ்சிபுரம் .
Arulmigu Pavalavannar And Pachaivannar Temple, Kancheepuram - 631502, Kancheepuram District [TM001727]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு விஷ்ணு பகவான் தசாவதாரங்கள் எழுந்தருளியிருக்கிறார். இந்த தசாவதாரங்களில் ஒவ்வொரு அவதாரத்திலும் ஒரு வண்ணமாக பத்து அவதாரங்களில் பத்து வண்ணமாக காட்சி அருளியிருக்கிறார். தசாவதாரங்களில் இராமர் அவதாரத்தில் பச்சைவண்ணமாக காட்சியருளியிருக்கிறார் என்பது பெரியோர்களின் மரபு இப்படி இராமர் அவதாரம் எடுத்ததில் அவர் மனித சுபாவமாக இருந்தார் இறைவன் தான் என்று கூறவில்லை. ஆதலால் ஸ்பத ரிஷிகளில் மரீஷீ ரிஷி என்பவர் ராம அவதாரத்தில் ஏன் மனித சுபாவத்தில் இருந்தார் பகவான் என்று நடந்து கொள்ளவில்லை என்று சந்தேகம் கொண்டு தவம் செய்து பெருமாளை பிரார்த்தித்தார் எனவே, அவருக்காக பச்சைநிற மேனியாக வில் அம்புடன் இராமராக காட்சியருளினார். சாட்சாத் இராம அவதாரம் எடுத்தது விஷ்ணுதான் என்று அதே பச்சைநிறத்துன் சங்கு சக்ரதாரியாக விஷ்ணு...