தல வரலாறு

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டம் ராயபுரம் கிராமத்தில் பாப்பா குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னர் ராயபுரம் அக்ரஹாரவாசிகளால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.குளக்கரையில் முதலில் விநாயகர் கோயில் மட்டும் இருந்ததாகவும் அதன் பின்னர் சிறிது காலம் கழித்து சிவன் கோயில் கட்டப்பட்டதாகவும் கிராமவாசிகளால் தெரிவிக்கப்படுகிறது. வரலாற்று ஆதாரங்களோ, கல்வெட்டுகளோ இத்திருக்கோயிலுக்கு இல்லை.