Screen Reader Access     A-AA+
அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில், கீழபழையாறை, கும்பகோணம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Somanathaswamy Temple, Kizhapazhayaarai, Kumbakonam - 612703, Thanjavur District [TM018003]
×
Temple History

தல வரலாறு

மங்கையர்குலத்திலகம், சைவ சமயத்தின் விடிவெள்ளி, சைவத்தின் ஆணிவேர் என்றெல்லாம் போற்றப்படும் மங்கையர்க்கரசி மணி முடிச்சோழன் மகளாக இவ்வூரில் பிறந்தார். இவர் கூன்பாண்டியனின் மனைவியாவார். சமணப்படுகுழியில் பாண்டிய மன்னன் வீழ்ந்து கிடக்க பாண்டிய நாட்டின் சமயமாக சமணம் திகழ்ந்தது. ஞானசம்பந்தப்பெருமான் இறைவனுடைய திருவருளால் ஞானப்பால் உண்டு தலங்கள் தோறும் சென்று திருமுறைகளைப்பாடி வருகின்ற தன்மையையும், மீண்டும் சைவத் திருக்கோயில்கள் மறுமலர்ச்சி உற்று புதுப்பொழிவு பெற்றுத் திகழ்வதையும் மங்கையர்க்கரசியார் அறிந்தார். தங்கள் அமைச்சர் குலச்சிரையார் மூலமாக ஞானசம்பந்தரை பாண்டிய நாட்டிற்கு அழைத்தார். பாண்டி மன்னனின் வெப்புநோய் ஞானசம்பந்தரால் நீக்கப்பெற்றது. ஞானசம்பந்தரால் பாண்டி மன்னனின் கூன்முதுகு நிமிரப்பெற்றதால் சீர் நெடுமாறன் எனும் பெயர் பெற்றார். அங்கே சைவமும் நிமிர்ந்து...

தல பெருமை

தட்சனுடைய சாபத்தால் சந்திரனுக்கு ஏற்பட்ட உடல் அழுகும் நோய் வரப்பட்டது இதனைப் போக்க இத்திருக்கோயில் திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தார். ஈசன் திருவருளால் தன்னுடைய இழந்த கலைகள் யாவும் மீண்டும் வளரும் தன்மை பெற்றார். ஈசனிடம் தனக்கு ஏற்பட்டது போல் நோயுடையார் இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபட நோய் நீங்கப்பெற வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார். மேலும் நல்நிலையிலிருந்து வறுமையுற்றோர் இத்தல இறைவனிடம் வந்து வழிபட மீண்டும் இழந்த செல்வங்களைப் பெற வேண்டும் என வேண்டினார். சந்திரனுக்கு சோமன் என்று ஒரு பெயர் உண்டு. சோமன் வழிபட்டு அழியாப் பெருவாழ்வு பெற்றதால் இறைவன் சோமநாதர் என்று அழைக்கப்படுகிறார். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவருக்கும் இறைவன். பரம்பொருளைத் தாங்குகின்ற பெருமை தனக்கே உரியது...