சோழர்களால் பழையாறை வடதளி என்று அழைக்கப்பெற்ற ஸ்தலம் முழையூரில் வள்ளலார் கோயில் எனவும் தருமபுரீஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. அப்பர் சுவாமிகளால் உண்ணாநோன்பு இருந்து சமணர்களால் மறைக்கப்பெற்ற இத்திருக்கோயில் வெளி கொண்டு வரப்பெற்றது. கோட்செங்கசோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதிநாயனார் அவதரித்த திருத்தலமாகும்.
பெரியபுராண வரலாறு
திருநாவுக்கரசர் பழையாறை வடதளி எனும் தலத்தை அடைந்தார். அங்குள்ள திருக்கோயில் விமானத்தைக் கண்டு வணங்கிய அடிகள் அது சமணரால் மறைக்கப்பெற்றிருத்தலைக் கண்டு மனம் வருந்தினார். சிவன் திருவுருவைக் கண்டாலன்றிப் போகேன் எனக்கூறி உண்ணாநோன்பு மேற்கொண்டார். ...சோழர்களால் பழையாறை வடதளி என்று அழைக்கப்பெற்ற ஸ்தலம் முழையூரில் வள்ளலார் கோயில் எனவும் தருமபுரீஸ்வரர் கோயில் எனவும் அழைக்கப்படுகின்றது. அப்பர் சுவாமிகளால் உண்ணாநோன்பு இருந்து சமணர்களால் மறைக்கப்பெற்ற இத்திருக்கோயில் வெளி கொண்டு வரப்பெற்றது. கோட்செங்கசோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலாகும். 63 நாயன்மார்களில் ஒருவரான அமர்நீதிநாயனார் அவதரித்த திருத்தலமாகும்.
பெரியபுராண வரலாறு
திருநாவுக்கரசர் பழையாறை வடதளி எனும் தலத்தை அடைந்தார். அங்குள்ள திருக்கோயில் விமானத்தைக் கண்டு வணங்கிய அடிகள் அது சமணரால் மறைக்கப்பெற்றிருத்தலைக் கண்டு மனம் வருந்தினார். சிவன் திருவுருவைக் கண்டாலன்றிப் போகேன் எனக்கூறி உண்ணாநோன்பு மேற்கொண்டார். இறைவன் பழையாறை மன்னன் கனவில் தோன்றி.........
அறிவில் அமணர் நமைமறைப்ப
இருந்தோம் என்றங் கடையாளக்
குறிகள் அறியச் செய்தருளி
நம்மை அரசு கும்பிடுவான்
நெறியில் அமணர் தமைஅழித்து
நீக்கிப் போக்கு
என்றருளினார். அரசன் அமைச்சருடன் திருக்கோயிலுக்கு விரைந்து சென்றார். இறைவன் கனவில் அருள்செய்த அடையாளங்களைக் கண்டார். அமண் வஞ்சனையை நீக்கினார். தூரறுத்தார், விமானத்தை விளக்குமுறச் செய்தார், வழிபாட்டர்ச்சனைக்கு நிவந்தம் நல்கினார். ஞான அரசர் வாகீசரும் திருக்கோயிலுட்புக்குத் தலை எலாம் எனத் துவங்கும் திருக்குறுந்தொகையில் பாடியுள்ளார் என்று பெரியபுராண வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.