தல வரலாறு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் மிகப்பழமையான செங்கல் கட்டுமானத்தால் ஆன சிதலமடைந்த திருக்கோயிலாக காணப்பட்ட அருள்மிகு காசிவிஸ்வநாதசுவாமி திருக்கோயில் 1955-ம் வருடத்தில் சுவாமிமலை, அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலின் இணைகோயிலாக இணைக்கப்பட்டு 1958-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. காசிக்கு சென்று வரும் பலன் இத்திருத்தலத்தில் வருகை புரிவதால் கிடைக்கும். இத்திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அன்று துர்க்கை அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுவது இத்தலத்தின் சிறப்பாகும்.