தல வரலாறு

சுவாமிமலை, அருள்மிகு சாஸ்தா அய்யனார் திருக்கோயில் காவிரியின் வடகரை மற்றும் அருள்மிகு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலின் மேற்கு பகுதியின் பிரதான சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சுவாமிமலையின் கிராம தேவதையாகவும், எல்லை தெய்வமாகவும் உள்ளது. சாஸ்தா அய்யனாரை வழிபட இழந்த பொருளை திரும்ப பெறலாம் என்பது ஐதீகம் ஆகும்.