அருள்மிகு சக்கரவாகேஸ்வரசுவாமி திருக்கோயில், சக்கராப்பள்ளி, பாபநாசம் - 614211, தஞ்சாவூர் .
Arulmigu Chakkaravakeeswaraswamy Temple, Chakkarapalli, Papanasam - 614211, Thanjavur District [TM018010]
×
Temple History
தல வரலாறு
தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கராப்பள்ளி என்ற திருத்தலம். இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் 7ம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமாகவும், 134 தேவார பாடல் பெற்ற சிவதலத்தில் 17வது தலமாக காவிரி தென்கரையில் சோழவளநாட்டில் அமைந்துள்ளது. பங்குனி மாத சப்தஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒரு காலத்தில் குபேரன் இத்தலத்தில் வழிபட்டு இழந்த குபேரபட்டணத்தை அடைந்ததாகவும் சங்கநிதி - பதுமை நிதி பெற்றான் என்றும் தனக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக பிரம்மதேவன் சக்கரவாகம் என்ற பட்சியாக உருகொண்டு இத்தலத்தில் தங்கி தவம் செய்து தாமரை தடாகத்தில் நீராடி சாபம் நீங்கப்பெற்றமையால்...தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் அய்யம்பேட்டைக்கு அருகில் உள்ளது சக்கராப்பள்ளி என்ற திருத்தலம். இது தேவாரப்பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் 7ம் நூற்றாண்டில் பாடல் பெற்ற தலமாகவும், 134 தேவார பாடல் பெற்ற சிவதலத்தில் 17வது தலமாக காவிரி தென்கரையில் சோழவளநாட்டில் அமைந்துள்ளது. பங்குனி மாத சப்தஸ்தான திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஒரு காலத்தில் குபேரன் இத்தலத்தில் வழிபட்டு இழந்த குபேரபட்டணத்தை அடைந்ததாகவும் சங்கநிதி - பதுமை நிதி பெற்றான் என்றும் தனக்கு ஏற்பட்ட சாபத்தின் காரணமாக பிரம்மதேவன் சக்கரவாகம் என்ற பட்சியாக உருகொண்டு இத்தலத்தில் தங்கி தவம் செய்து தாமரை தடாகத்தில் நீராடி சாபம் நீங்கப்பெற்றமையால் சக்கராப்பள்ளி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது. திருமால் இங்கு சக்கராவாகேஸ்வரரை வழிப்பட்டு சக்கராயுதம் பெற்றமையால் சக்கராப்பள்ளி என்ற பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு திருஞானசம்பந்தர் பாடிய ஒரு பதிகம் உள்ளது.
படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.
உலக மக்கள் பிறவிப்பிணி ஒழிந்து பேரின்பவீடு அடைய பிறப்பும் இறப்பும் இலா கருணை மூர்த்தியாகிய சிவபெருமான், நீர்வளம், நிலவளம் நிரம்பப்பெற்ற சோழவள நாட்டில் பல சிறந்த தலங்களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார். அத்தகைய பதிகளில் சக்கராப்பள்ளி என்பது சிறப்பாகத் திகழ்கிறது. அப்பதி சைவ சமய ஆச்சாரியர்களாகிய திருஞானசம்பந்தப் பெருமானாலும், திருநாவுக்கரசராலும் புகழ்ந்து பாடப்பெற்ற பெருமையும் உடையது. மேலும் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது. இத்தலம் பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், முனிவர்களால் பூஜிக்கப்பட்டது. சக்கரவாகபட்சி வழிபட்டு வீடடைந்த வரலாறு பெற்றது. சப்த மங்கையர்களாகிய பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, மகேந்திரி, சாமுண்டி இவர்கள் பூஜித்த பெருமையால் சப்தஷேத்திரங்கள் ஏற்பட்டன. மேலும் பாசம் பொழிந்த பதியை அடைய கோரி அநவித்யநாதசர்மா என்பவர் தன் இல்லக்கிழத்தி அனவிக்ஞை சகிதம் ஒவ்வொரு தினமும் சப்தமங்கையர்கள் பூஜித்த சப்த தலங்களையும் அதாவது திருசக்கரமங்கை, ஹரிமங்கை, சூலமங்கை, நந்திமங்கை, பசு மங்கை, புள்ள மங்கை இவைகளைப் பூஜித்த அந்நிகழ்ச்சியை குறித்து சிவபெருமான் தொன்றுதொட்டு சித்திரை நட்சத்திரத்தில் சப்தஸ்தான பல்லக்கு புறப்பட்டு ஏழு ஸ்தலங்களிலேயே சப்த மங்கைகளுக்கு காட்சி தந்து அருளுகிறார்.