அருள்மிகு எழுத்தறிநாதசுவாமி திருக்கோயில், இன்னம்பூர் - 612303, தஞ்சாவூர் .
Arulmigu Ezhtharinatha Swamy Temple, Innambur - 612303, Thanjavur District [TM018011]
×
Temple History
தல வரலாறு
அகண்ட சச்சிதானந்த ரூபியாய் ஆனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அர்ச்சாவதார் ரூபியாய் திருமேனி தாங்கி கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற சோழவளநாட்டிடையே பொன்னிநதியாம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 54 தலங்களுள் 45-வது திருத்தலமாக அமைந்துள்ளது.
திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். சூரியன் வழிபட்டுத் தன் ஒளிமிகப்பெற்றதால் இனன்சூரியன்நம்பு ஊர் என வழங்கி இன்னம்பூர் என பெயர் பெற்றது. சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1,2 பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் காலையில் சிவலிங்க திருமேனியில் ஒளிபடுகின்றது. இதனை சூரியபூஜையாக கொண்டாடுகின்றனர்.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளையானை இங்கு உள்ள...அகண்ட சச்சிதானந்த ரூபியாய் ஆனந்த மூர்த்தியாகி எங்கும் நீக்கமற நிறைகின்ற எம்பெருமான் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அர்ச்சாவதார் ரூபியாய் திருமேனி தாங்கி கோயில் கொண்டு எழுந்தருளி அருள்பாலித்து வருகின்ற சோழவளநாட்டிடையே பொன்னிநதியாம் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 54 தலங்களுள் 45-வது திருத்தலமாக அமைந்துள்ளது.
திருநாவுக்கரசர், திருஞானசம்மந்தர் ஆகியோரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். சூரியன் வழிபட்டுத் தன் ஒளிமிகப்பெற்றதால் இனன்சூரியன்நம்பு ஊர் என வழங்கி இன்னம்பூர் என பெயர் பெற்றது. சூரிய ஒளி ஆவணி 31, புரட்டாசி 1,2 பங்குனி 13,14,15 ஆகிய தேதிகளில் காலையில் சிவலிங்க திருமேனியில் ஒளிபடுகின்றது. இதனை சூரியபூஜையாக கொண்டாடுகின்றனர்.
தேவேந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளையானை இங்கு உள்ள தடாகத்தில் ஸ்நானம் செய்து இறைவனை வழிபட்டு தன் சாபத்தை போக்கிக் கொண்டதால் இங்கு உள்ள தீர்த்தத்திற்கு ஐராவத தீர்த்தம் என்றும், இறைவனுக்கு ஐராவதேசுவரர் என பெயரும் உண்டு. சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட விமானம். இந்த விமானத்திற்கு ஐந்து கலசங்கள் அமைந்துள்ளன. இவை சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம், திரோபவம், அநுக்கிரகம் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்து தொழில்களையும் எம்பெருமான் விளையாட்டாக செய்தருளுகின்றார் என்பதை குறிப்பால் உணர்த்துகின்றார். இந்த விமானம் யானை படுத்து இருப்பது போன்று அமைந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே இத்தகைய விமான அமைப்பு மூன்று தலங்களில் மட்டும்தான் உள்ளது.
இத்தலத்தில் இறைவன் தானகத் தோன்றியமையால் தான்தோன்றியீசர் என வழங்கப்படுகிறார். அகஸ்திய முனிவருக்குத் தமிழிலக்கணம் உபதேசித்த காரணத்தால் எம்பெருமானுக்கு அட்சரபுரீஸ்வரர் எனவும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன.
சுதஸ்மன் என்ற ஆதிசைவர் கணக்கராக இருந்து அரசனிடம் கணக்கை சமர்ப்பித்தார். அரசனுக்கு கணக்கில் ஐயம் ஏற்பட்டது. சுதஸ்மன் தன்பழியை போக்க இறைவனை வேண்டினார். ஈசனே சுதஸ்மன் ரூபத்தில் மன்னனிடம் சன்று கணக்கை சமர்ப்பித்து ஐயத்தை போக்கினார். இதனாலேயே சிவபெருமானுக்கு அருள்மிகு எழுத்தறிநாதர் என பெயர் வந்தது. வாய்பேச முடியாதவர்கள், படிப்பு அறிவு இல்லாதவர்கள் இப்பெருமானை வணங்கி நல்ல அறிவு கூர்மையும், வாய்பேச்சும் பெற்று வருகிறார்கள். இத்திருத்தலத்தை வழிபடுபவர்களுக்கு பூர்வ ஜென்ம பாவங்கள், திருமணத்தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் போன்றவகைள் நிவர்த்தியாகும் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.