அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர் - 609401, மயிலாடுதுறை .
Arulmigu Veerateswarar Temple, Vazhuvur - 609401, Mayiladuthurai District [TM018062]
×
Temple History
தல வரலாறு
அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர்
குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
ஸ்தல வரலாறு
48000 மகரிஷிகள் பிரமாவிடம் போய் தாங்கள் தவம் செய்ய ஒர் இடம் வேண்டும் என்று கூறுகின்றனர் பிரம்மா நான் தர்பையிலான ஒர் வலையத்தை வீசுவேன் அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் தவம் செய்யலாம் என்று கூறுகின்றார். அதுதான் தாருகாவனம்(தர்பையினால் ஆனது தாருகாவம்) தவம் செய்து நாங்கள் தான் எல்லா கடவுளுக்கும் மேலானவன் எங்களால் தான் உலகம் இயங்குகிறது என்று ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் எங்களுக்கு மேல் கற்புடையவள் யாரும் கிடையாது என்று என்னுகின்றனர் இந்த ஆணவத்தை அழிக்க ( சிவன் பிச்சாடராகவும் விஷ்ணு மோகினியாகவும் அவதரிக்கின்றனர்) இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்தவுடன் அய்யனார் பிறக்கிர். ...அருள்மிகு வீரட்டேஸ்வரர் சுவாமி திருக்கோயில், வழுவூர்
குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்
ஸ்தல வரலாறு
48000 மகரிஷிகள் பிரமாவிடம் போய் தாங்கள் தவம் செய்ய ஒர் இடம் வேண்டும் என்று கூறுகின்றனர் பிரம்மா நான் தர்பையிலான ஒர் வலையத்தை வீசுவேன் அது எந்த இடத்தில் விழுகிறதோ அந்த இடத்தில் தவம் செய்யலாம் என்று கூறுகின்றார். அதுதான் தாருகாவனம்(தர்பையினால் ஆனது தாருகாவம்) தவம் செய்து நாங்கள் தான் எல்லா கடவுளுக்கும் மேலானவன் எங்களால் தான் உலகம் இயங்குகிறது என்று ரிஷிகளும் ரிஷிபத்தினிகளும் எங்களுக்கு மேல் கற்புடையவள் யாரும் கிடையாது என்று என்னுகின்றனர் இந்த ஆணவத்தை அழிக்க ( சிவன் பிச்சாடராகவும் விஷ்ணு மோகினியாகவும் அவதரிக்கின்றனர்) இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பார்த்தவுடன் அய்யனார் பிறக்கிர். ஹரிக்கும் ஹரனுக்கும் பிறந்ததால் ஹரிஹரபுத்திரன் (அய்யப்பன்) பின்னர் ரிஷிபத்தினி இருக்கும் இடத்திற்கு பிச்சாண்டவரும், ரிஷிகள் இருக்கும் இடத்திற்கு மோகினியும் செல்கின்றனர். இவர்கள் அழகில் மயங்கி தாங்கள் தங்கள் தவங்களை கலைகின்றனர். ரிஷிகள் கோபம் கொண்டு நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க நாங்களும் உங்களுடன் தவம் செய்ய வந்து இருக்கிறோம் என்று கூறுகின்றனர் ரிஷிகள் நீங்கள் மிகுந்த அழகுடன் வந்ததற்கு காரணம் என்ன என்று கேட்கின்றனர். அதற்கு அஞ்ஞானத்தால் பார்த்தால் மிகுத்த அழகு தெரிகிறது. ஞானத்தால் பார்த்தால் அழகு தெரியாது என்று கூறுகின்றனர் அதனால் ரிஷிகள் கோபம் கொண்டு ஆபிச்சார ஹோமன் செய்து அதிலிருந்து மான், பாம்பு, அக்னி இவற்றை ஏவுகின்றனர் அவை ஈஸ்வரன் கையில் ஆயுதமாக மாறுகின்றது. உடன் யாகத்தில் இருந்து யானையை ஏவுகின்றனர். அந்த யானையை மதம் பிடிக்குமாறு செய்து ஈஸ்வரன் மறைகின்றார். யானை ரிஷிகளை துன்புறுத்த அப்பொழுது தான் அவர்களுக்கு பரமேஸ்வரர் ஒருவர் இருப்பதை நினைத்து பார்க்கின்றனர்.
ரிஷிகன் இறைவனை வழிப்படுகின்றனர் இறைவன் குழந்தை ரூபமாக மாறி யானைக்குள் செல்லுகின்றார் ( யானை பெயர் கிருத்தி அதற்குள் வாசம் செய்ததால் கிருத்திவாசன் என பெயர் உண்டாயிற்று) யானைக்குள் சென்றவுடன் உலகமே இருண்டு போயிற்று. அம்பாளுக்கு பயன் வந்து ஸ்வாமி என்று தயங்கி திரும்பி பார்க்கிறார். திரும்பி பார்த்தவுடன் யானையை கிழித்துக்கொண்டு சுவாமி வெளியே வருகிறார். சுவாமி வந்தவுடன் அம்பாள் இடுப்பில் இருக்கும் குழந்தை முருகன் தனது ஆள்காட்டி விரலால் இதோ அப்பா என்று காட்டுகின்றார்.
48,000 மகரிஷிகளுக்கு அஞ்ஞானத்தை போக்கி ஞானத்தை கொடுத்ததால் ஸ்ரீ ஞானசபேஸ்வரர் என்ற மற்பொரு பெயரும் உண்டாயிற்று. இந்த சபைக்கு ஞானசபை என்று பெயர் வீரநடனம் புரிந்ததால் வீரட்டேஸ்வரர் என்ற பெயர் உண்டு. யானையை உரித்த பெருமான் கஜசம்ஹாரமூர்த்தி (கஜம் என்றால் யானை என்று பொருள்) இவருக்கு பின்புறம் உள்ள பரிகார ரகசியம் யந்திரம் ஆரத்தி செய்தால் திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கிடைக்கும்.
48,000 மகரிஷிகள் ஆபிச்சார ஹோமம் செய்ததால் சாபம் ஏற்படுகிறது. அதன் நிவர்த்திக்காக இறைவன் 48 நாட்களில் 1008 சிவாலயங்களை தரிசிக்க வேண்டும் என்று கூறுகின்றார். 48 நாட்கள் முடீந்தவுடன் 1008 சிவாலயங்களை தரிசிக்க முடீயாததால் ஒரே பானத்தில் (பிம்பம்) ஆயிரத்தி எட்டு லிங்கமாக பிரிதிஷ்டை செய்துள்ளனர். இங்கு சஹஸ்ரலிங்கத்திற்கு தனி கோயில் அமைந்துள்ளது.
தல பெருமை
பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன - அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல...பிரளய காலத்தில் உலகெல்லாம் அழிந்தும் இவ்வூர் அழியாது பிரளயத்தினின்றும் வழுவின காரணத்தால் வழுவூர் என்று பெயர் பெற்றது. தாருகாவனத்து முனிவர்கள் இறைவனுக்கு எதிராகச் செய்த ஆபிசார வேள்வியில் தோன்றிய யானையை, இறைவன்பால் ஏவிவிட, பெருமான் அந்த யானையை அழித்துத் தோலைப் போர்த்திக் கொண்டருளிய வீரச் செயல் நிகழ்ந்த தலம். ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர, அதையழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன - அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை, பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே, முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினாராம். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.