தல பெருமை
திருநகரி கல்யாண ரெங்கநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருநகரி எனும் கிராமத்தில் அமைந்த இரட்டைத் தலங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட வைணவக் கோயிலாகும். இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். கோயில் மூலவர் பெயர் வேதராஜன், தாயார் பெயர் அமிர்தவள்ளி நாச்சியார்.1 திருநகரி தலம் திருமங்கை ஆழ்வார் பிறந்த இடமாகும். இக்கோயிலின் இராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டது. கோயில் உற்சவரின் பெயர் கல்யாண ரங்கநாதர் ஆகும். இக்கோயில் வேதராஜன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.