தல வரலாறு
கைலாயத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பாா்வதி தேவியாா் மனித உருவம் கொண்டு இத்தலத்தில் உள்ள இறைவனை வணங்கும் போது இறைவன் காட்சியளித்து பாா்வதி தேவியாரை மணந்துக்கொண்ட திருத்தலமாகும். மேலும் சுந்தரருக்கு சரும நோய் ஏற்பட்ட போது இறைவனை மனமுருகி வேண்டி இத்தலத்தில் உள்ள பொய்கையில் நீராடி வந்த போது சுந்தரரின் உருவம் பொன் போல மாறியது என்பது இத்தலத்தின் சிறப்பாகும்