Screen Reader Access     A-AA+
அருள்மிகு மார்க்கசகாயசுவாமி திருக்கோயில், மூவலூர், Mayiladuthurai - 609806, மயிலாடுதுறை .
Arulmigu Margasagayaswamy Temple, Moovalur, Mayiladuthurai - 609806, Mayiladuthurai District [TM018082]
×
Temple History

தல பெருமை

வித்யுன்மாலி, தாரகாட்சன், கமலாட்சனி என்ற மூன்று அசுரர்களும் முறையே பொன், வெள்ளி, இரும்புக் கோட்டைகளைக் கட்டி, தேவர்களையும் மக்களையும் வாட்டி வதைத்து வந்தனர். தன்னிடம் சரணாகதி அடைந்த தேவர்களையும் மக்களையும் காத்திட திருவுள்ளம் கொண்டார் ஈசன். அதைத் தொடர்ந்து பிரம்மா, திருமால், தேவர்கள் உள்ளிட் டோரைக் கொண்டு தேர் பூட்டி திருவதிகை நோக்கி புறப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் உள்ளிட்டோர் அசுரர்களை அழிக்கும் செயல் தங்கள் உதவியினாலேயே நடக்கிறது என்று எண்ணி கர்வம் கொண்டனர். இந்த கர்வத்தால் திருமால், பிரம்மா, தேவர்கள் அனைவருக்கும் சாபம் ஏற்பட்டது. மனம் வருந்திய திருமால், பிரம்மா மற்றும் தேவர்கள் இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினர். அவரது ஆலோசனைப்படி காவிரி தென்கரையில் உள்ள புன்னாகவனேசுவரரைத் தேடி வந்தனர்....