தல பெருமை

இத்திருக்கோயில் ராஜ சோழ வம்சத்தவர்களால் பூஜிக்கப்பட்டு வந்த காரணத்தினால் ராஜ வினாயகர் என அழைக்கப்படுகின்றார். இத்திருக்கோயில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. மூன்றாம் குலோத்துங்க சோழன் சாக்கோட்டையில் தனது கோட்டையை நிறுவும் பணி ஆரம்பிக்கும் முன் இத்திருக்கோயிலை கட்டி வழிபட்டார் என இத்திருக்கோயில் புராண வரலாறு கூறுகிறது.